தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 526 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்று வேலூர் மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,180ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 1293 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று வரை அம்மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.