ETV Bharat / state

லாரியில் கஞ்சா கடத்திய மூன்றுபேர் கைது - ganja seized in vellore

வேலூர்: லாரியில் 32 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

லாரியில் கஞ்சா கடத்திய மூவர் கைது
author img

By

Published : Oct 20, 2019, 9:04 PM IST

வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இன்று வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.

சோதனையில் லாரியில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த புலனாய்வு காவல் துறையினர் லாரியில் இருந்த மூன்றுபேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், முருகன், இஸ்மாயில் என்பது தெரியவந்தது.

லாரியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

ரூ.7லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்றுபேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இன்று வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு லாரியை வழிமறித்து சோதனை செய்தனர்.

சோதனையில் லாரியில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த புலனாய்வு காவல் துறையினர் லாரியில் இருந்த மூன்றுபேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், முருகன், இஸ்மாயில் என்பது தெரியவந்தது.

லாரியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

ரூ.7லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், மூன்றுபேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் அருகே லாரியில்
32 கிலோ கஞ்சா கடத்தல் - 3 பேர் கைதுBody:வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு காவல் துறையினர் இன்று வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த ஈச்சர் லாரி சந்தேகத்தின் பேரில் வந்து கொண்டிருந்த்து. இதையடுத்து அந்த லாருயை சோதனை செய்தபோது அதில் மூட்டையில் கஞ்சா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து ஆய்வு செய்து பார்த்தபோது அதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 32 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்த்து லாரியில் வந்த திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், முருகன், இஸ்மாயில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி பறிமுதல செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, லாரி மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரும் காட்பாடியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அலுவகத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.