ETV Bharat / state

வேலூரில் 3 கிலோ தங்கம் பறிமுதல்! தேர்தல் பறக்கும்படை அதிரடி

வேலூர்: வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட மூன்று கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

author img

By

Published : Jul 12, 2019, 12:23 PM IST

vellore

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முதல் வேலூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் வேலூரில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வாணியம்பாடி, காதர்பேட்டை சந்திப்புப் பகுதியில் முருகதாஸ் என்ற தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்துவந்தனர். அப்போது ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது காரை மடக்கி சோதனையிட்ட போது உள்ளே மூன்று கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரமேஷ் கொடுக்கவில்லை. இதையடுத்து அலுவலர்கள் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மோதிரம் உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களாக இருந்துள்ளது. இதையடுத்து வாணியம்பாடி வட்டாட்சியர் மூலம் இந்த நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூரில் மறு தேர்தல் அறிவித்த பிறகு முதல் முறையாக மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று முதல் வேலூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் மாதம் வேலூரில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வாணியம்பாடி, காதர்பேட்டை சந்திப்புப் பகுதியில் முருகதாஸ் என்ற தேர்தல் அலுவலர் தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்துவந்தனர். அப்போது ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது காரை மடக்கி சோதனையிட்ட போது உள்ளே மூன்று கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.

அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரமேஷ் கொடுக்கவில்லை. இதையடுத்து அலுவலர்கள் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் பெண்கள் அணியக்கூடிய கம்மல், வளையல், மோதிரம் உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களாக இருந்துள்ளது. இதையடுத்து வாணியம்பாடி வட்டாட்சியர் மூலம் இந்த நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூரில் மறு தேர்தல் அறிவித்த பிறகு முதல் முறையாக மூன்று கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro:வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடிBody:வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முதல் வேலூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது எனவே இந்த முறை பணப்பட்டுவாடா தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் அதன்படி வேலூரில் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் 3 குழுவாக பிரிக்கப்பட்டு ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் இன்று அதிகாலை வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை ஜங்சன் பகுதியில் முருகதாஸ் என்ற அதிகாரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கை செய்து வந்தனர் அப்போது ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது காரை மடக்கி சோதனையிட்டபோது உள்ளே 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது அதற்கான ஆவணங்களை கேட்டபோது ரமேஷ் கொடுக்கவில்லை இதையடுத்து அதிகாரிகள் அந்த நகைகளை அதிரடியாக பறிமுதல் செய்தனர் அவை அனைத்தும் பெண்கள் அணியக்கூடிய கம்மல் வளையல் மோதிரம் உள்ளிட்ட பல்வேறு அணிகலன்களாக இருந்தது இதையடுத்து வாணியம்பாடி வட்டாட்சியர் மூலம் இந்த நகைகள் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது இதுகுறித்து வட்டாட்சியரிடம் கேட்டபோது, "ரமேஷ் வாணியம்பாடியில் விக்னேஷ்வரா கோல்டு ஹவுஸ் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருவதாகவும் அதற்காக பல்வேறு நகை உற்பத்தியாளர்களிடமிருந்து நகைகளை வாங்கி வந்தத்தாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார் ஆனால் அவரிடம் கையில் எந்த ஆவணமும் இல்லாததால் முறைப்படி நாங்கள் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம் எனவே அவர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றனர் வேலூரில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.