ETV Bharat / state

வாணியம்பாடியில்10 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்புகள் பிடிபட்டன - 10 feet long python caught in Thiruppattur

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகளை பொதுமக்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

வாணியம்பாடியில்10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.! திருப்பத்தூர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.! 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. 10 feet long python caught in Vaniyambadi. 10 feet long python caught in Thiruppattur python caught in Thiruppattur
python caught in Thiruppattur
author img

By

Published : Jan 28, 2020, 5:45 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உதயேந்திரம் குந்தானிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்துவருகிறார். இந்நிலையில், தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை கூலியாட்கள் மூலம் அறுவடை செய்து வந்தார். அப்போது, நிலத்தின் மையப்பகுதியில் 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுடன் சேர்ந்து இரண்டு மலைப்பாம்புகளையும் பிடித்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பாம்பை வனத்துறையினர் மாதகடப்பா காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

பிடிபட்ட மலைப்பாம்புகள்

இதையும் படிங்க:

ராட்சத மலைப்பாம்பினை லாவகமாக கையில் பிடித்த இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள உதயேந்திரம் குந்தானிமேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்துவருகிறார். இந்நிலையில், தனது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை கூலியாட்கள் மூலம் அறுவடை செய்து வந்தார். அப்போது, நிலத்தின் மையப்பகுதியில் 10 அடி நீளமுள்ள இரண்டு மலைப்பாம்புகள் ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறை, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்களுடன் சேர்ந்து இரண்டு மலைப்பாம்புகளையும் பிடித்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பாம்பை வனத்துறையினர் மாதகடப்பா காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

பிடிபட்ட மலைப்பாம்புகள்

இதையும் படிங்க:

ராட்சத மலைப்பாம்பினை லாவகமாக கையில் பிடித்த இளைஞர்

Intro: முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு ஆய்வு.
போதிய மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். Body: கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது. ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனைகளை இக்குழுவினர் வழங்குவர். அதன்படி அணையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் போதிய மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மூவர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
முன்னதாக தேக்கடியில் உள்ள படகுத்துறை இருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு மூவர் குழுவினர் மற்றும் தமிழக - கேரள அதிகாரிகள் படகில் சென்றனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதிக்கு பிறகு தற்போது மூவர் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர்) உள்ளிட்டவைகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
Conclusion: இதனைத் தொடர்ந்து குமுளி 1ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.