ETV Bharat / state

தொழில்புரட்சியால் அனைத்து வளங்களும் நாசமாகின! - தொழிற்புரட்சி குறித்து தண்ணீர் அமைப்பு

திருச்சி: தொழில்புரட்சியால்தான் நீர் போன்ற அனைத்து வளங்களும் நாசமாவதாக தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Word soil day celebration
Word soil day celebration
author img

By

Published : Dec 6, 2019, 4:24 PM IST

திருச்சியிலுள்ள செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக மண் தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் பேசிய தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார், "மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி மூன்றாம் உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இப்போது மேற்குலக நாடுகள் விழித்துக் கொண்டன. அங்கே தடைசெய்யப்பட்ட நச்சு தொழிற்சாலைகள் நம் நாட்டில் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக நதிகள், மலைகள், நிலவளம் நிலத்தடி என அனைத்தும் வரையறையின்றி கொள்ளைபோகின்றன.

மண்வளம் மலடாகி பன்னாட்டுப் பிடியில் இயற்கை வளங்கள் வணிகமயமாகிவருகிறது. மண்வளமின்றி மனித வளமில்லை. பல்லுயிர்கள் வாழ்வதற்கான ஒரு கோள் புவி மட்டுமே என்பதை உணர்ந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள் சாயக்கழிவுகளை நீரிலும் நிலத்திலும் கலக்காமல் தடுத்து மண் வளத்தை காத்திட வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு மூங்கில், மலை வேம்பு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: சென்னையில் காஃபி வித் கமிஷனர்.!

திருச்சியிலுள்ள செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக மண் தின விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.

இந்த விழாவில் பேசிய தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார், "மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழில்புரட்சி மூன்றாம் உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் இப்போது மேற்குலக நாடுகள் விழித்துக் கொண்டன. அங்கே தடைசெய்யப்பட்ட நச்சு தொழிற்சாலைகள் நம் நாட்டில் தொடங்கப்பட்டன. இதன் விளைவாக நதிகள், மலைகள், நிலவளம் நிலத்தடி என அனைத்தும் வரையறையின்றி கொள்ளைபோகின்றன.

மண்வளம் மலடாகி பன்னாட்டுப் பிடியில் இயற்கை வளங்கள் வணிகமயமாகிவருகிறது. மண்வளமின்றி மனித வளமில்லை. பல்லுயிர்கள் வாழ்வதற்கான ஒரு கோள் புவி மட்டுமே என்பதை உணர்ந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள் சாயக்கழிவுகளை நீரிலும் நிலத்திலும் கலக்காமல் தடுத்து மண் வளத்தை காத்திட வேண்டும்" என்றார்.

இந்நிகழ்வில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு மூங்கில், மலை வேம்பு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: சென்னையில் காஃபி வித் கமிஷனர்.!

Intro:தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக மண் தின விழா திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. Body:
திருச்சி:
தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக மண் தின விழா திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். தண்ணீர் அமைப்பின் இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார் பேசுகையில், மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி மூன்றாம் உலக நாடுகளை விட்டு வைக்க வில்லை. மேற்குலக நாடுகள் விழித்துக் கொண்டது. அங்கே தடை செய்யப்பட்ட நச்சு தொழிற்சாலைகள் யாவும் நம் நாட்டில் தொடங்கப்பட்டது. இதன் விளைவு நம் நதிகள், மலைகள், நிலவளம் நிலத்தடி நீர்யாவும் வரையறையின்றி கொள்ளைப் போயின.
மண் வளம் மலடாகி பன்னாட்டுப் பிடியில் இயற்கை வளங்கள் வணிகமயமாகி வாழ்விழந்து நிற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. மண் வளம் இன்றி மனித வளமில்லை. பல்லுயிர்கள் வாழ்வதற்கான ஒரு கோள் புவி மட்டுமே என்பதை நாம் சிந்தித்து மண் வளம் காத்திட மரக்கன்றுகளை நட்டு வளர்த்தல் வேண்டும். நெகிழிப்பைகள் தவிர்த்து துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகள், மருத்துவக் கழிவுகள் சாயக்கழிவுகள் யாவையும் நீரிலும் நிலத்திலும் கலக்காமல் தடுத்து இயற்கை வாழ்வியல் முறையை கடைபிடித்து மண் வளம் காத்திட வேண்டும் என்றார். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு மூங்கில், மலை வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தண்ணீர் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா,அலெக்ஸ்,ஜெயந்தி, சந்திராதேவி, அருணா, ரீனா, விக்டோரியா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவில் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி மண் வளம் காக்க உறுதி மொழி எற்கப்பட்டது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.