ETV Bharat / state

திருச்சி விமானநிலையத்தில் புதிய டெர்மினல் கட்டுமான பணி மும்முரம்! - புதிய டெர்மினல் கட்டுமானப்பணி தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் புதிய டெர்மினல் அமைக்கும் பணி மூழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

trichy terminal
trichy terminal
author img

By

Published : Jan 16, 2020, 8:29 PM IST

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் ஒன்று. துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு உள்ளூர் விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 12 விழுக்காடு பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

புதிதாக கட்டப்படும் டெர்மினல் மேப் பிளான்
புதிதாக கட்டப்படும் டெர்மினல் மேப் பிளான்

ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகள் தற்போது வந்துசெல்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 2025ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.25 மில்லியனாக இருக்கும். எனவே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 950 கோடி ரூபாய் செலவில் புதிய டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் 75 ஆயிரம் சதுர அடியில், உள்ளூர் பயணிகள் 600 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாள வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளை கையாள 48 கவுன்டர்களும், எமிகிரேஷன், இமிகிரேஷனுக்கு தலா 40 கவன்டர்களும், புறப்பாடு பயணிகளுக்கு 10 நுழைவு வாயில்களும், வருகை தரும் பயணிகளுக்கு 6 நுழைவு வாயில்களும் அமைக்கப்படுகிறன்றன.

மும்முரமாக நடைபெற்று வரும் புதிய டெர்மினல் பணி

பயணிகளின் உடமைகளை கையாள 5 கவுன்டர்களும், 15 எக்ஸ்ரே கருவிகள், 12 தானியங்கி பரிசோதனை கருவிகள், 3 விஐபி.க்கள் வருகை பகுதி, 10 ஏரோ பிரட்ஜஸ், 5 எஸ்கலேட்டர்ஸ், 26 எலிவேட்டர்களும் அமைக்கப்படும். டெர்மினலின் கூரை மீது சூரிய மின்சார உற்பத்தி தகடுகளுடன் அமைக்கப்படுகிறது. ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'திருக்குறள் படித்தால் சாதிவெறி இல்லாமல் போகும்'

மும்பையைச் சேர்ந்த ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய டெர்மினல் அமைக்கும் பணி தற்போது 30 விழுக்காடு பணிகள் முடிவடைந்திருப்பதாக விமானநிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் ஒன்று. துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு உள்ளூர் விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் ஆண்டுக்கு 12 விழுக்காடு பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

புதிதாக கட்டப்படும் டெர்மினல் மேப் பிளான்
புதிதாக கட்டப்படும் டெர்மினல் மேப் பிளான்

ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகள் தற்போது வந்துசெல்கின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 2025ஆம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.25 மில்லியனாக இருக்கும். எனவே விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய விமானநிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், 950 கோடி ரூபாய் செலவில் புதிய டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

புதிதாக அமைக்கப்படும் டெர்மினல் 75 ஆயிரம் சதுர அடியில், உள்ளூர் பயணிகள் 600 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாள வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளை கையாள 48 கவுன்டர்களும், எமிகிரேஷன், இமிகிரேஷனுக்கு தலா 40 கவன்டர்களும், புறப்பாடு பயணிகளுக்கு 10 நுழைவு வாயில்களும், வருகை தரும் பயணிகளுக்கு 6 நுழைவு வாயில்களும் அமைக்கப்படுகிறன்றன.

மும்முரமாக நடைபெற்று வரும் புதிய டெர்மினல் பணி

பயணிகளின் உடமைகளை கையாள 5 கவுன்டர்களும், 15 எக்ஸ்ரே கருவிகள், 12 தானியங்கி பரிசோதனை கருவிகள், 3 விஐபி.க்கள் வருகை பகுதி, 10 ஏரோ பிரட்ஜஸ், 5 எஸ்கலேட்டர்ஸ், 26 எலிவேட்டர்களும் அமைக்கப்படும். டெர்மினலின் கூரை மீது சூரிய மின்சார உற்பத்தி தகடுகளுடன் அமைக்கப்படுகிறது. ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'திருக்குறள் படித்தால் சாதிவெறி இல்லாமல் போகும்'

மும்பையைச் சேர்ந்த ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. புதிய டெர்மினல் அமைக்கும் பணி தற்போது 30 விழுக்காடு பணிகள் முடிவடைந்திருப்பதாக விமானநிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Intro:திருச்சி விமானநிலையத்தில் புதிய டெர்மினல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. Body:திருச்சி:
திருச்சி விமானநிலையத்தில் புதிய டெர்மினல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விமானநிலையங்களில் திருச்சி சர்வதேச விமானநிலையமும் ஒன்று. துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமானங்களும், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு உள்ளூர் விமானங்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானநிலையத்திற்கு ஆண்டுக்கு பயணிகள் வருகை 12 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 1.5 மில்லியன் பயணிகள் தற்போது கையாளப்படுகிறது. இந்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் 2025ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 3.25 மில்லியனாக இருக்கும். இதை எதிர்கொள்வதற்காக விமானநிலையத்தை விஸ்தரிப்பு செய்ய விமானநிலைய ஆணையம் முடிவு செய்தது.
இதையடுத்து ரூ. 950 கோடி செலவில் புதிய டெர்மினல் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து தற்போதுள்ள டெர்மினலுக்கு வலது புறத்தில் அடித்தளம் உள்பட மொத்தம் 75 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படுகிறது. உள்ளூர் பயணிகள் 600 பேர் உள்பட மொத்தம் 2 ஆயிரத்து 900 பயணிகளை கையாள வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. பயணிகளை கையாள 48 கவுன்டர்களும். எமிகிரேஷன் மற்றும் இமிகிரேஷனுக்கு தலா 40 கவுன்டர்களும், புறப்பாடு பயணிகளுக்கு 10 நுழைவு வாயில்களும், வருகை தரும் பயணிகளுக்கு 6 நுழைவு வாயில்களும் அமைக்கப்படுகிறது.
பயணிகளின் உடமைகளை கையாள 5 கவுன்டர்களும், 15 எக்ஸ்ரே கருவிகள், 12 தானியங்கி பரிசோதனை கருவிகள், 3 விஐபி.க்கள் வருகை பகுதி, 10 ஏரோ பிரட்ஜஸ், 5 எஸ்கலேட்டர்ஸ், 26 எலிவேட்டர்களும் அமைக்கப்படுகிறது. மேலும், டெர்மினலின் கூரை மீது சூரிய மின்சார உற்பத்தி தகடுகளுடன் அமைக்கப்படுகிறது. ஆயிரம் கார்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக பார்கிங் வசதி செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ளது போது புறப்பாடு பகுதியில் கார் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது. இதனால் விமானநிலைய பகுதியில் நெருக்கடியை தவிர்க்க முடியும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் இந்த பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஐடிடி சிமென்டேஷன் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் தற்போது கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. 30 சதவீத பணிகள் முடிவடைந்திருப்பதாக விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.