துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை வழியாக இன்று திருச்சி வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.
அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத் (23), அசாருதீன் (23) ஆகிய இருவரும் தங்களது உடலில் 560 கிராம் தங்கத்தை மறைத்து கடத்திவந்ததை சுங்க அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.
![trichy airport, gold seized](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3340288_266_3340288_1558422899517.png)
பின்னர் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 17.56 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.