ETV Bharat / state

விமானத்தில் தங்கம் கடத்திய பலே ஆசாமிகள் கைது! - திருச்சி

திருச்சி: துபாயிலிருந்து ரூ. 17.56 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திவந்த இருவரை திருச்சி விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் கைது செய்தனர்.

gold seized
author img

By

Published : May 21, 2019, 3:17 PM IST

துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை வழியாக இன்று திருச்சி வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத் (23), அசாருதீன் (23) ஆகிய இருவரும் தங்களது உடலில் 560 கிராம் தங்கத்தை மறைத்து கடத்திவந்ததை சுங்க அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

trichy airport, gold seized
கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கம்

பின்னர் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 17.56 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை வழியாக இன்று திருச்சி வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த யாசர் அராபத் (23), அசாருதீன் (23) ஆகிய இருவரும் தங்களது உடலில் 560 கிராம் தங்கத்தை மறைத்து கடத்திவந்ததை சுங்க அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

trichy airport, gold seized
கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கம்

பின்னர் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கடத்திவந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 17.56 லட்சம் என சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:தங்கம் கடத்தி வந்த 2 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கின.ர்


Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:
துபாயிலிருந்து ரூ. 17.56 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 2 பேர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினர்.
துபாயில் இருந்து இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது.
திருச்சி விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர். பயணிகளின் உடமைகளையும் அதிகாரிகள் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி யைச் சேர்ந்த யாசர் அராபத் (வயது 23), அசாருதீன் (வயது 23) ஆகிய இருவரும் தங்களது உடலில் மறைத்து 560 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 17.56 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Conclusion:இருவரும் உடலில் மறைத்து 560 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.