ETV Bharat / state

கல்லூரி பேராசிரியை கடத்தல் - அதிமுக பிரமுகர் மீது புகார்

author img

By

Published : Sep 30, 2019, 12:53 PM IST

திருச்சி: கல்லூரி பேராசிரியையையை கடத்தியதாக அதிமுக நிர்வாகி வணக்கம் சோமு மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் சோமு

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றபோது ஆம்புலன்ஸில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி சென்றது. அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை விரட்டி சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்றது.

இதைத்தொடர்ந்து பேராசிரியையின் பெற்றோர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை தேடிவந்த நிலையில், துவரங்குறிச்சி அருகே அந்த கும்பல் மகாலட்சுமியை விட்டுச் சென்றது. இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.

கோட்டை காவல்நிலையம்
கோட்டை காவல்நிலையம்

பின்னர் பேராசிரியையிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வணக்கம் சோமு, தனது ஆதரவாளர்களுடன் பேராசிரியையை கடத்தியது தெரியவந்தது. அவர் ஏன் கடத்தினார், பேராசிரியைக்கும், வணக்கம் சோமுவுக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கைகுழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார்

திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றபோது ஆம்புலன்ஸில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி சென்றது. அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை விரட்டி சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்றது.

இதைத்தொடர்ந்து பேராசிரியையின் பெற்றோர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை தேடிவந்த நிலையில், துவரங்குறிச்சி அருகே அந்த கும்பல் மகாலட்சுமியை விட்டுச் சென்றது. இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.

கோட்டை காவல்நிலையம்
கோட்டை காவல்நிலையம்

பின்னர் பேராசிரியையிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வணக்கம் சோமு, தனது ஆதரவாளர்களுடன் பேராசிரியையை கடத்தியது தெரியவந்தது. அவர் ஏன் கடத்தினார், பேராசிரியைக்கும், வணக்கம் சோமுவுக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கைகுழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார்

Intro:திருச்சியில் கல்லூரி பேராசிரியை கடத்தியதாக அதிமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.


Body:குறிப்பு: வணக்கம் சோமுவின் புகைப்படம் wrap மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ....

திருச்சி: திருச்சியில் கல்லூரி பேராசிரியை கடத்தியதாக திமுக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியை சேர்ந்தவர் ஜோதி பெரியசாமி. இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களது மகள் மகாலட்சுமி. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் வணக்கம் சோமு. இவர் அதிமுக மலைக்கோட்டை பகுதி பொருளாளராக உள்ளார்.
இவர் திருச்சி மத்திய கூட்டுறவு வங்கியின் துணை இயக்குனராகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார்.
இதனால் தனியாக வசித்து வந்த வணக்கம் சோமு மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி மகாலட்சுமிக்கு தொந்தரவு கொடுத்து வந்தார். இதுதொடர்பாக மகாலட்சுமி குடும்பத்தார் வணக்கம் சோமுவை அழைத்து கண்டித்து உள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் நின்றிருந்த மகாலட்சுமியை வணக்கம் சோமுவும் அவரது ஆதரவாளர்களும் ஆம்புலன்ஸ் வேனில் கடத்திச் சென்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் விரட்டிச் சென்றனர். ஆனால் மின்னல் வேகத்தில் வேன் அங்கிருந்து வேகமாக சென்று விட்டது.
இதுகுறித்து மகாலட்சுமி குடும்பத்தார் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் இளம்பெண்ணை கடத்திய அதிமுக பிரமுகரை தேடிவருகின்றனர்.
இதற்கிடையில் கடத்தப்பட்ட மகாலட்சுமி திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே வேனில் இருந்து இறக்கி விட்டுவிட்டு வணக்கம் சோமு தலைமையிலான கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து அவரை மீட்ட போலீசார் தலைமறைவான வணக்கம் சோமுவை யும் அவரது ஆதரவாளர்களையும்தேடி வருகின்றனர்.


Conclusion:கடத்தப்பட்ட மகாலட்சுமியை துவரங்குறிச்சி அருகே வேனில் இருந்து இறக்கி விட்டுவிட்டு வணக்கம் சோமு தலைமையிலான கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.