ETV Bharat / state

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைப் பள்ளி திருச்சியில் தொடக்கம்!

author img

By

Published : Oct 8, 2019, 5:51 PM IST

தஞ்சை: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

Thanjavur tamil university music school

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்னநகர் அமலோற்பவம் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் முதற்கட்டமாக வயலின், பரதநாட்டியம், வீணை ஆகிய சான்றிதழ் பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைய இயக்குநர் அந்துவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான்கு ஆண்டுகள் கொண்ட இந்த பாடத்திட்டத்திற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறும்.

திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இசைப்பள்ளி

ஆறு மாதங்களுக்கு ஒரு கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு கிரேடுகள் கொண்ட கல்வி திட்டமாக இது இருக்கும். வகுப்புகள் மாலை 5 முதல் 6 மணி வரை மற்றும் 6 மணி முதல் 7 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறும்.

பயிற்சியின் நிறைவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: நான்காம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் - பள்ளியில் நடந்த கொடூரம்!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. திருச்சி பொன்னநகர் அமலோற்பவம் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் முதற்கட்டமாக வயலின், பரதநாட்டியம், வீணை ஆகிய சான்றிதழ் பயிற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மைய இயக்குநர் அந்துவான் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான்கு ஆண்டுகள் கொண்ட இந்த பாடத்திட்டத்திற்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறும்.

திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள இசைப்பள்ளி

ஆறு மாதங்களுக்கு ஒரு கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு கிரேடுகள் கொண்ட கல்வி திட்டமாக இது இருக்கும். வகுப்புகள் மாலை 5 முதல் 6 மணி வரை மற்றும் 6 மணி முதல் 7 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறும்.

பயிற்சியின் நிறைவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: நான்காம் வகுப்பு மாணவியை தாக்கிய சக மாணவர்கள் - பள்ளியில் நடந்த கொடூரம்!

Intro:தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.Body:

திருச்சி:
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் இசை மற்றும் நாட்டியப் பயிற்சி பள்ளி திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், திருச்சி மறைமாவட்ட கல்விச் சங்கம் ஆகியவை இணைந்து இசை மற்றும் நாட்டியப் பள்ளியை திருச்சியில் தொடங்கியுள்ளன. திருச்சி பொன்னநகர் அமலோற்பவம் வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள இப்பள்ளியில் முதற்கட்டமாக தற்போது வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பரதநாட்டியம் ஆகிய சான்றிதழ் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மைய இயக்குனர் அந்துவான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

4 ஆண்டுகள்கொண்ட இந்த பாடத்திட்டத்திற்கு வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி நடைபெறும். 6 மாதங்களுக்கு ஒரு கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் 8 கிரேடுகள் கொண்ட கல்வி திட்டமாக இது இருக்கும். வகுப்புகள் மாலை 5 முதல் 6 மணி வரை மற்றும் 6 மணி முதல் இரவு 7 மணி வரை என இரு பிரிவுகளாக நடைபெறும். பயிற்சியின் நிறைவில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும்.
8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த பயிற்சி சேரலாம். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் முதன்முதலாக இத்தகைய பயிற்சி பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. அந்தந்த துறைகளில் முறையாக படித்து பல்கலைக்கழக பட்டம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.Conclusion:திருச்சி மாநகர மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது குழந்தைகளின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.