ETV Bharat / state

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா - dharna against pension scheme

திருச்சி: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் திருச்சியில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
author img

By

Published : Jul 15, 2019, 7:39 PM IST

ஓய்வுபெற்ற வங்கி ஓய்வூதியர்கள், பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணாவில், ஓய்வூதிய சட்ட விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 விழுக்காடு பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும், ஊதிய திருத்தம் செய்யும்போது ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு பிரீமியத்தை வங்கியே செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

இதில், அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக், ஊழியர் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டமைப்பின் தலைவர்கள் கணேசன், ஜவஹர் அலி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஓய்வுபெற்ற வங்கி ஓய்வூதியர்கள், பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணாவில், ஓய்வூதிய சட்ட விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 விழுக்காடு பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும், ஊதிய திருத்தம் செய்யும்போது ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு பிரீமியத்தை வங்கியே செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தர்ணாவில் ஈடுபட்ட ஓய்வூதியர்கள்

இதில், அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக், ஊழியர் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டமைப்பின் தலைவர்கள் கணேசன், ஜவஹர் அலி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Intro:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் திருச்சியில் தர்ணா போராட்டம் நடத்தினர்.


Body:திருச்சி: ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியன் வங்கி ஓய்வூதியர்கள், பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று தர்ணா போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்க பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ ராஜேந்திர தேவ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இணைச் செயலாளர் சரவணமுத்து வாழ்த்திப் பேசினார். துணைத் தலைவர்கள் சற்குணம், கேசவமூர்த்தி, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓய்வூதிய சட்ட விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 சதவீத பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். ஊதிய திருத்தம் செய்யும் போது ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு பிரீமியத்தை வங்கியே செலுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் பணிக்கொடை உயர்வை 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் அசோக், ஊழியர் சங்க உதவிப் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டமைப்பின் தலைவர்கள் கணேசன், ஜவஹர் அலி, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Conclusion:தர்ணா போராட்டத்தின் போது ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.