ETV Bharat / state

ராமஜெயம் வழக்கு, துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம்!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் குறித்து துப்பு துலங்க சரியான தகவல் கொடுப்பவருக்கு ரூ.50 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

author img

By

Published : Apr 23, 2022, 3:07 PM IST

Updated : Apr 23, 2022, 7:23 PM IST

ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை இன்னும் நெருங்கவில்லைராமஜெயம் கொலை வழக்கில்  தகவல் தருபவருக்கு 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும்
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை இன்னும் நெருங்கவில்லை ராமஜெயம் கொலை வழக்கில் தகவல் தருபவருக்கு 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வாக்கிங் சென்றபோது படு கொலை செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரை ஓரமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலையாளி மற்றும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாத நிலையில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், 15 நாள்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று (ஏப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்: அதில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியிலிருந்த ஆறு காவல்துறை அதிகாரிகள் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் அயல்நாடுகளில் உள்ள தொடர்பு குறித்த கேள்விக்கு அயல்நாடுகளில் தொழில் செய்பவர்கள் இங்கேதான் வசிக்கிறார்கள் அவர்களையும் விசாரணைக்கு வரவைப்போம் தினமும் கிட்டத்தட்ட பத்துபேரை விசாரித்துக்கொண்டிருக்கிறோம் ராமஜெயம் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள்,வியாபாரிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாமல் சென்னை ,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.மேலும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் திருச்சியில் இன்று (ஏப்.23) சிறப்பு புலனாய்வு குழு செய்தியாளர்களை சந்தித்து வழக்கின் நிலை குறித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர்கள், "2012ஆம் வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் தீவிர விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது.

அமைச்சர்கள் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் அப்போது பணியில் இருந்த காவலர்கள் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரித்தோம் குற்றவாளிகளை நெருக்கி விட்டதாக நாங்கள் கூறவில்லை. அதன் படி இந்த வழக்கு குறித்து துப்பு துலங்க சரியான தகவல் தருபவருக்கு 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் முகவரியும் காவல்துறை வெளியிட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் கேட்டுக்கொண்டனர்.

தொலைபேசி எண்: ஜெயக்குமார் எஸ்பி - 9080616341, 94981230467, 7094012599(WhatsApp)

மின்னஞ்சல் முகவரி: sitcbeidtri@gmail.com

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு - புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது புதிய துப்பு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் வாக்கிங் சென்றபோது படு கொலை செய்யப்பட்டார். 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், திருச்சியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரை ஓரமாகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலையாளி மற்றும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாத நிலையில் தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், 15 நாள்களுக்கு ஒரு முறை விசாரணை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று (ஏப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்: அதில், சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில் புதிய துப்பு துலங்கியுள்ளது எனவும், சம்பவம் நடந்த காலத்தில் பணியிலிருந்த ஆறு காவல்துறை அதிகாரிகள் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளதாகவும் அயல்நாடுகளில் உள்ள தொடர்பு குறித்த கேள்விக்கு அயல்நாடுகளில் தொழில் செய்பவர்கள் இங்கேதான் வசிக்கிறார்கள் அவர்களையும் விசாரணைக்கு வரவைப்போம் தினமும் கிட்டத்தட்ட பத்துபேரை விசாரித்துக்கொண்டிருக்கிறோம் ராமஜெயம் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகள்,வியாபாரிகள் என அனைவரிடமும் விசாரணை நடத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாமல் சென்னை ,மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய குற்றவாளிகளிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.மேலும், 43 அதிகாரிகள் புலன் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் எனவும், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரகசிய அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஜூன் 10ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்த நிலையில் திருச்சியில் இன்று (ஏப்.23) சிறப்பு புலனாய்வு குழு செய்தியாளர்களை சந்தித்து வழக்கின் நிலை குறித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர்கள், "2012ஆம் வருடம் மார்ச் மாதம் 20 ஆம் தேதி தொழிலதிபர் ராமஜெயம் என்பவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் தீவிர விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது தகவல்கள், கடிதங்கள் மற்றும் கைபேசி குறுஞ்செய்தி மூலமாக பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவலை இக்குழுவானது தீவிர விசாரணை செய்து வருகிறது.

அமைச்சர்கள் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள் அப்போது பணியில் இருந்த காவலர்கள் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரித்தோம் குற்றவாளிகளை நெருக்கி விட்டதாக நாங்கள் கூறவில்லை. அதன் படி இந்த வழக்கு குறித்து துப்பு துலங்க சரியான தகவல் தருபவருக்கு 50 லட்சம் வெகுமதி வழங்கப்படும். அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் முகவரியும் காவல்துறை வெளியிட்டுள்ளது. எனவே இவ்வழக்கு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது எனக் கேட்டுக்கொண்டனர்.

தொலைபேசி எண்: ஜெயக்குமார் எஸ்பி - 9080616341, 94981230467, 7094012599(WhatsApp)

மின்னஞ்சல் முகவரி: sitcbeidtri@gmail.com

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு - புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது புதிய துப்பு!

Last Updated : Apr 23, 2022, 7:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.