ETV Bharat / state

சிறப்பு குறைதீர் கூட்டத்தில் நடந்த தர்ணா போராட்டம்!

author img

By

Published : Sep 7, 2019, 6:50 PM IST

திருச்சி : அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் கூட்டத்தில் நிர்வாகிகள் தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

வையாபுரி லோக் தந்த்ரிக் ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர்


திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது,

தர்ணவாக மாறிய குறைதீர் கூட்டம்

அடிப்படை வசதிகள் செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி கைவிட வேண்டும், பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது, பாலக்கரை பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை கடந்த ஆறு மாதமாக வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வையாபுரியும், நிர்வாகிகளும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வார்டு பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது,

தர்ணவாக மாறிய குறைதீர் கூட்டம்

அடிப்படை வசதிகள் செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி கைவிட வேண்டும், பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது, பாலக்கரை பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை கடந்த ஆறு மாதமாக வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வையாபுரியும், நிர்வாகிகளும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றனர். பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வார்டு பிரச்னைகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Intro:திருச்சி மாநகராட்சி சிறப்பு குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Body:திருச்சி:
மாநகராட்சியை கண்டித்து குறைதீர் கூட்டத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சி மாநில பொதுச்செயலாளர் வையாபுரி தலைமையில் அதன் நிர்வாகிகள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையை மாநகராட்சி கைவிட வேண்டும். பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரிக்கு பதவி உயர்வு அளித்தது கண்டிக்கத்தக்கது. பாலக்கரை பகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை கடந்த 6 மாதமாக வலியுறுத்தியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விடாப்பிடியாக இருந்தனர். இதன்பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வார்டு பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டம் காரணமாக இன்று பரபரப்பு நிலவியது.

பேட்டி:
வையாபுரி
லோக் தந்த்ரிக் ஜனதா தளம் மாநில பொதுச் செயலாளர்


Conclusion:ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.