ETV Bharat / state

அரசுப்பேருந்து மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை

திருச்சி: மணப்பாறை அருகே அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மாராச்சி என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மரணம்
author img

By

Published : Jul 27, 2019, 5:13 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாராச்சி(75). இவர் தனது பேரன் பிரசன்னகுமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மலையடிபட்டி பிரிவில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து பழனியை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மாராச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர், படுகாயமடைந்த பிரசன்னகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்த மாராச்சி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாராச்சி(75). இவர் தனது பேரன் பிரசன்னகுமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மலையடிபட்டி பிரிவில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து பழனியை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மாராச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர், படுகாயமடைந்த பிரசன்னகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்த மாராச்சி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Intro:இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலி - பள்ளி மாணவன் படுகாயம்.
Body:
திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே மாராச்சி ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாராச்சி (75) இவர் மஞ்சம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேரன் பிரசன்னகுமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மலையடிபட்டி பிரிவில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது திருச்சியிலிருந்து பழனியை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் மாராச்சி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீஸார் படுகாயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த மாராச்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.