ETV Bharat / state

"10 ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்த ஊழலை ஸ்டாலின் அரசு  ஒரே ஆண்டில் செய்துவிட்டது"

author img

By

Published : Jun 3, 2022, 9:49 AM IST

Updated : Jun 3, 2022, 1:11 PM IST

10 ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்த ஊழலை ஸ்டாலின் அரசு ஒரே ஆண்டில் செய்துவிட்டது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ntk-seeman-responds-to-ponnaiyans-comment-on-bjp
ntk-seeman-responds-to-ponnaiyans-comment-on-bjp

திருச்சி: நாம் தமிழர் கட்சி, மதிமுக ஆதரவாளர்களுக்கு இடையில் நடந்த தகராறு காரணமாக தொடரப்பட்ட வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜூன் 2) நீதிமன்றத்திற்கு ஆஜரானார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வைகோ மீது எனக்கு பகை இல்லை. அவர்களை நாங்கள் எதிரியாக கூட கருதவில்லை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆண்ட கட்சி உள்ளிட்ட நாட்டை நாசமாக்குபவர்கள் மட்டுமே எங்களுக்கு எதிரிகள். சவுக்கு சங்கர், மாரிதாஸ், கோபிநாத் போன்ற யூ டியூப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் என்று கூறிவிட்டு, தற்போது அதிகாரம் இருக்கிறது என்பதால் குரல்வளையை நெறிக்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டியதே ஜனநாயகம். சென்னையில் 20 நாள்களில் 18 கொலைகள் நிகழ்ந்தாலும், முதலமைச்சர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுகிறார்.

90 விழுக்காடு ஊடகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து உள்ளவர்களையும் கைது செய்வது என்பது ஏற்புடையதல்ல. நான் என் பாதையிலான பயணத்தில் தெளிவாக இருக்கிறேன்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமை உருவாக்கியதே கருணாநிதிதான். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாமை மூடவேண்டும்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

இலங்கை தமிழர்களுக்கு அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று நாடகம் நடத்தி வருகின்றார்கள். மோடி ஊடகங்களை சந்தித்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மணலை கொள்ளையடித்தும், மலையை அழித்தும் காசாக்கி வருவதை காங்கிரஸ், பாஜகவை எதிர்க்குமா? 70 ஆண்டுகளில் சிறுகச்சிறுக நாசம் செய்ததை எட்டு ஆண்டுகளில் அவர்கள் நாசம் செய்து விட்டார்கள்.

அதுபோல 10 ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்த ஊழலை இவர்கள் ஒரே ஆண்டில் முடித்துவிட்டார்கள். வரும் நான்கு ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஊழல்களை செய்து விடுவார்கள். நீட், புதிய கல்விக் கொள்கை என பல்வேறு தேர்வுகளை வைத்து வதைக்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து எனக் கூறிவிட்டு, இப்போதுவரை அந்த கையெழுத்தை போடவில்லை. மருத்துவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து துறைகளுக்கும் தேர்வு இருப்பதுபோல எல்லாவற்றையும் நிர்வாகம் செய்யும் தலைவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

நாட்டை ஆள்பவர்கள் தகுதியானவர்களா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். நேர்மையான நீதிபதிகளைக் கொண்டு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறுபவர்ளைக் கொண்டு நாட்டை ஆள செய்ய வேண்டும். பாஜக குறித்த அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் கருத்தை மதிக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல - பொன்னையன்

திருச்சி: நாம் தமிழர் கட்சி, மதிமுக ஆதரவாளர்களுக்கு இடையில் நடந்த தகராறு காரணமாக தொடரப்பட்ட வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜூன் 2) நீதிமன்றத்திற்கு ஆஜரானார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வைகோ மீது எனக்கு பகை இல்லை. அவர்களை நாங்கள் எதிரியாக கூட கருதவில்லை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆண்ட கட்சி உள்ளிட்ட நாட்டை நாசமாக்குபவர்கள் மட்டுமே எங்களுக்கு எதிரிகள். சவுக்கு சங்கர், மாரிதாஸ், கோபிநாத் போன்ற யூ டியூப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் என்று கூறிவிட்டு, தற்போது அதிகாரம் இருக்கிறது என்பதால் குரல்வளையை நெறிக்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டியதே ஜனநாயகம். சென்னையில் 20 நாள்களில் 18 கொலைகள் நிகழ்ந்தாலும், முதலமைச்சர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுகிறார்.

90 விழுக்காடு ஊடகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து உள்ளவர்களையும் கைது செய்வது என்பது ஏற்புடையதல்ல. நான் என் பாதையிலான பயணத்தில் தெளிவாக இருக்கிறேன்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமை உருவாக்கியதே கருணாநிதிதான். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாமை மூடவேண்டும்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு

இலங்கை தமிழர்களுக்கு அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று நாடகம் நடத்தி வருகின்றார்கள். மோடி ஊடகங்களை சந்தித்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மணலை கொள்ளையடித்தும், மலையை அழித்தும் காசாக்கி வருவதை காங்கிரஸ், பாஜகவை எதிர்க்குமா? 70 ஆண்டுகளில் சிறுகச்சிறுக நாசம் செய்ததை எட்டு ஆண்டுகளில் அவர்கள் நாசம் செய்து விட்டார்கள்.

அதுபோல 10 ஆண்டுகளில் எடப்பாடி அரசு செய்த ஊழலை இவர்கள் ஒரே ஆண்டில் முடித்துவிட்டார்கள். வரும் நான்கு ஆண்டுகளில் 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய ஊழல்களை செய்து விடுவார்கள். நீட், புதிய கல்விக் கொள்கை என பல்வேறு தேர்வுகளை வைத்து வதைக்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து எனக் கூறிவிட்டு, இப்போதுவரை அந்த கையெழுத்தை போடவில்லை. மருத்துவர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என அனைத்து துறைகளுக்கும் தேர்வு இருப்பதுபோல எல்லாவற்றையும் நிர்வாகம் செய்யும் தலைவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

நாட்டை ஆள்பவர்கள் தகுதியானவர்களா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். நேர்மையான நீதிபதிகளைக் கொண்டு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறுபவர்ளைக் கொண்டு நாட்டை ஆள செய்ய வேண்டும். பாஜக குறித்த அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் கருத்தை மதிக்கிறேன்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக வளர்வது அதிமுகவுக்கு நல்லதல்ல - பொன்னையன்

Last Updated : Jun 3, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.