ETV Bharat / state

திருமண பேனரில் நித்தியானந்தாவை கண்டென்ட் ஆக்கிய மாப்பிள்ளைத் தோழர்கள் - விருந்தினர்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Aug 28, 2020, 4:45 PM IST

திருச்சி : மணப்பாறை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் நித்யானந்தாவை வாழ்த்தி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரால் பரபரப்பு ஏற்பட்டது.

mrg
met

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை, விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கும் இன்று (ஆக. 28) திருமணம் நடைபெற்றது.

இதில், வழக்கப்படி மணமக்களை வாழ்த்தியும், திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றும் மண்டபத்திற்கு முன்பு மாப்பிள்ளைத் தோழர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், ”No சூடு, No சொரணை” என்ற வாசகமும், ”பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க!” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு குற்றாச்சாட்டுகளில் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை பெருமைப்படுத்தும் விதமாக பொருத்தப்பட்டிருந்த இந்த பேனர் அத்திருமணத்தை தாண்டி பேசுபொருள் ஆனது.

met
நித்தியானந்தாவைப் பாராட்டி வைக்கப்பட்ட திருமண பேனர்

மேலும், மாப்பிள்ளை நண்பர்கள் 17 பேரின் புகைப்படங்களும் அந்த பேனரில் இணைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைலாசம் செல்லவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்தச் செய்தி காட்டுத்தீ போல் ஊரில் பரவத் தொடங்கி நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் துறையினர், நித்யானந்தாவின் புகைப்படம் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்றினர். இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை, விராலிமலை அருகேயுள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கும் இன்று (ஆக. 28) திருமணம் நடைபெற்றது.

இதில், வழக்கப்படி மணமக்களை வாழ்த்தியும், திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றும் மண்டபத்திற்கு முன்பு மாப்பிள்ளைத் தோழர்கள் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அதில், ”No சூடு, No சொரணை” என்ற வாசகமும், ”பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க? கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க!” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தன. பல்வேறு குற்றாச்சாட்டுகளில் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை பெருமைப்படுத்தும் விதமாக பொருத்தப்பட்டிருந்த இந்த பேனர் அத்திருமணத்தை தாண்டி பேசுபொருள் ஆனது.

met
நித்தியானந்தாவைப் பாராட்டி வைக்கப்பட்ட திருமண பேனர்

மேலும், மாப்பிள்ளை நண்பர்கள் 17 பேரின் புகைப்படங்களும் அந்த பேனரில் இணைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைலாசம் செல்லவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து இந்தச் செய்தி காட்டுத்தீ போல் ஊரில் பரவத் தொடங்கி நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை காவல் துறையினர், நித்யானந்தாவின் புகைப்படம் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை உடனடியாக அகற்றினர். இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.