ETV Bharat / state

பாலம் கட்டுமானப் பணி மந்தம் - மாற்றுப் பாதையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்! - more traffic in new way

திருச்சி: பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதை, சரி இல்லாததால் வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன.

பாலம் கட்டுமான பணி மந்தம்
பாலம் கட்டுமான பணி மந்தம்
author img

By

Published : Dec 2, 2019, 4:43 PM IST

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச் சாவடியில் இருந்து எதுமலை வரை செல்லும் கரியமாணிக்கம் சாலை உள்ளது. இனாம், சமயபுரம் ஊராட்சி பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரை கிலோ மீட்டர் இடைவெளியில் பாலங்களின் கட்டுமானப்பணி, 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாலப் பணிகளை முன்னிட்டு மாற்றுப்பாதை அருகிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக இந்த மாற்று பாதை சேறும் சகதியுமாகவும், மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது. மேலும் இதில் மழைநீர் தேங்கி குட்டை போல் ஆங்காங்கே காட்சியளிக்கிறது.

பாலம் கட்டுமானப் பணி மந்தம்: மாற்றுப் பாதையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்

இதனால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, உடனடியாக சரியான மாற்றுப் பாதையை உருவாக்கித் தர, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச் சாவடியில் இருந்து எதுமலை வரை செல்லும் கரியமாணிக்கம் சாலை உள்ளது. இனாம், சமயபுரம் ஊராட்சி பகுதியில் ஒரே நேரத்தில் மூன்று பாலங்கள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அரை கிலோ மீட்டர் இடைவெளியில் பாலங்களின் கட்டுமானப்பணி, 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாலப் பணிகளை முன்னிட்டு மாற்றுப்பாதை அருகிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மழையின் காரணமாக இந்த மாற்று பாதை சேறும் சகதியுமாகவும், மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது. மேலும் இதில் மழைநீர் தேங்கி குட்டை போல் ஆங்காங்கே காட்சியளிக்கிறது.

பாலம் கட்டுமானப் பணி மந்தம்: மாற்றுப் பாதையில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்

இதனால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சில சமயங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, உடனடியாக சரியான மாற்றுப் பாதையை உருவாக்கித் தர, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:திருச்சி அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதை சரி இல்லாததால் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.Body:திருச்சி:
திருச்சி அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப் பாதை சரி இல்லாததால் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச் சாவடியில் இருந்து எதுமலை வரை செல்லும் கரியமாணிக்கம் சாலை உள்ளது.
இனாம் சமயபுரம் ஊராட்சி பகுதியில் ஒரே நேரத்தில் 3 பாலங்கள் நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் அரைகிலோ மீட்டர் இடைவெளியில் பாலங்கள் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாலப் பணிகளை முன்னிட்டு மாற்றுப்பாதை அருகிலேயே அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மழையின் காரணமாக இந்த மாற்று பாதை சேறும் சகதியுமாகவும், மேடும் பள்ளமுமாக மாறிவிட்டது. மேலும் இதில் மழைநீர் தேங்கி குட்டை போல் ஆங்காங்கே காட்சியளிக்கிறது.
இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
சமயங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடக்கிறது.
கனரக வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி கொள்கின்றன. இவ்வாறு வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாற்றுப்பாதை வசதி சரியான முறையில் ஏற்படுத்தித் தராததால் அவ்வழியாக செல்லும் 6 பேருந்துகளும் தடைபட்டுள்ளது .
இதனால் பள்ளி குழந்தைகள் உட்பட, 10 கிராம மக்கள் சமயபுரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

சமயபுரம் சுங்க சாவடியில் இருந்து பிரியும் இந்த சாலை சமயபுரம் புதூர், பூசாரிகொட்டம், அக்கரைப்பட்டி, தேவிமங்கலம், கன்னியாகுடி,
கரியமாணிக்கம், எதுமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், சாய்பாபா கோவில் ஆகியவை உள்ளது. தினமும்.
400க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்கின்றன. நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களும்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் மாற்றுப்பாதையில் இரவு நேரத்தில் செல்வதற்கான மின் விளக்குகளும் இல்லை.
அதனால் உடனடியாக மாற்றுப் பாதையை சரியான முறையில் சீரமைத்து அப்பகுதிகளில் பாதுகாப்பாக செல்வதற்கு மின் விளக்குகளும் ஏற்படுத்தி தர வேண்டும். மந்தமாக நடைபெறும் மாற்றும் பணியை விரைவு படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.