ETV Bharat / state

'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா' - அமைச்சர் நேருவின் 'ஜில்லா' ப்ளெக்ஸ்

author img

By

Published : Nov 8, 2022, 6:57 PM IST

அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாளையொட்டி திமுக தொண்டர்கள் திருச்சியில் விஜய்யின் ஜில்லா பட போஸ்டர் போல் ப்ளெக்ஸ் வைத்திருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Etv Bharat'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா’ - அமைச்சர் நேருவின் ஜில்லா ப்ளக்ஸ்
Etv Bharat'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா’ - அமைச்சர் நேருவின் ஜில்லா ப்ளக்ஸ்

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச்செயலாளருமான கே.என்.நேரு பிறந்தநாள் நாளை 09.11.2022ஆம் தேதியில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திருச்சி மாநகரில் உள்ள பல பகுதிகளில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அடுத்த மாதம் (12.12.2022) அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகவும் வாழ்த்து பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக திருச்சி தென்னூர் மேம்பாலத்துக்குக்கீழ் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை (09.11.2022) மற்றும் அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐப்பசியில் பிறந்த நாயகரே, கார்த்திகையில் பிறந்த காவியமே என்ற வசனத்துடன் தென்னூர் பகுதியை இளைஞர்களான குரு, நவநீதன், திவாகர், ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து 'ஜில்லா' படத்தில் ’சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா’ என்ற பாடலின் போது நடிகர் விஜய், மோகன்லால் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டது போல் உள்ள புகைப்படத்தை போல... அமைச்சர் கே.என்.நேரும் அவரது மகன் அருண் நேருவும் இருப்பதுபோல் பதாகையில் வைத்துள்ளனர். இதனை அவ்வழியாக செல்வோர் ஒரு நிமிடம் நின்று பார்த்து ரசித்துச்செல்கின்றனர்.

'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா' - அமைச்சர் நேருவின் 'ஜில்லா' ப்ளெக்ஸ்

இதையும் படிங்க:ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் பேச்சு

திருச்சி: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், திமுக முதன்மைச்செயலாளருமான கே.என்.நேரு பிறந்தநாள் நாளை 09.11.2022ஆம் தேதியில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாட இருக்கின்றனர். இதற்காக திருச்சி மாநகரில் உள்ள பல பகுதிகளில் திமுக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து பதாகைகள் வைத்துள்ளனர்.

இதற்கிடையில் அடுத்த மாதம் (12.12.2022) அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவின் பிறந்தநாளை திமுக தொண்டர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகவும் வாழ்த்து பதாகைகள், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக திருச்சி தென்னூர் மேம்பாலத்துக்குக்கீழ் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை (09.11.2022) மற்றும் அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாடும் கே.என்.நேரு, அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஐப்பசியில் பிறந்த நாயகரே, கார்த்திகையில் பிறந்த காவியமே என்ற வசனத்துடன் தென்னூர் பகுதியை இளைஞர்களான குரு, நவநீதன், திவாகர், ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து 'ஜில்லா' படத்தில் ’சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா’ என்ற பாடலின் போது நடிகர் விஜய், மோகன்லால் ஒருவருக்கொருவர் இடித்துக்கொண்டது போல் உள்ள புகைப்படத்தை போல... அமைச்சர் கே.என்.நேரும் அவரது மகன் அருண் நேருவும் இருப்பதுபோல் பதாகையில் வைத்துள்ளனர். இதனை அவ்வழியாக செல்வோர் ஒரு நிமிடம் நின்று பார்த்து ரசித்துச்செல்கின்றனர்.

'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா' - அமைச்சர் நேருவின் 'ஜில்லா' ப்ளெக்ஸ்

இதையும் படிங்க:ஆன்டிபயாடிக் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது - உலக சுகாதார மாநாட்டில் அமைச்சர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.