ETV Bharat / state

'மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் பார்த்து கொள்வார்கள்' - ஜி.கே.வாசன்

திருச்சி: சென்னை மேயர் பதவிக்கு உதய நிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

author img

By

Published : Nov 15, 2019, 4:16 PM IST

gk vasan

திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ள வேண்டும். மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது, இறப்பவர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்து, அரசு பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடந்தால் அதற்கு அதிமுக அரசு தான் காரணமாக இருக்கும். அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது.

இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி அமைக்கும். வருகின்ற 22ஆம் தேதி திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால் அதை திசை திருப்பும் வகையில் தேர்தல் ஆணையர் மாற்றத்தை விமர்சனம் செய்கின்றனர்" என்று கூறினார்.

G.K.vasan press meet

மேலும், சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிடுவதாக வெளிவந்து செய்தி குறித்த கேள்விக்கு, இது குறித்த வாக்காளர்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:

ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்!

திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரஃபேல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

சென்னை ஐஐடியில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ள வேண்டும். மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது.

கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது, இறப்பவர்கள் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்து, அரசு பயன்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடந்தால் அதற்கு அதிமுக அரசு தான் காரணமாக இருக்கும். அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது.

இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி அமைக்கும். வருகின்ற 22ஆம் தேதி திருச்சியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால் அதை திசை திருப்பும் வகையில் தேர்தல் ஆணையர் மாற்றத்தை விமர்சனம் செய்கின்றனர்" என்று கூறினார்.

G.K.vasan press meet

மேலும், சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிடுவதாக வெளிவந்து செய்தி குறித்த கேள்விக்கு, இது குறித்த வாக்காளர்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:

ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்!

Intro:சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
Body:

திருச்சி:

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட்டால் மக்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சியில் நடந்த கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். இதன் பின்னராவது எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சபரிமலை தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால் மக்கள் ஏற்கும் தீர்ப்பு வெளியாகும். அது வரை காத்திருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் உச்சநீதிமன்ற அலுவலகத்தையும் கொண்டு வந்தது வரவேற்க்கத்தக்கது. இதன் மூலம் வெளிப்படை தன்மை இருக்கும். எனினும் நியாயமற்ற செயல்களுக்கு இதை கருவியாக பயன்படுத்த கூடாது.

அமெரிக்கா சென்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்ம் 720 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது வரவேற்க்கத்தக்கது. தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது. நூறு நாள் வேலை திட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணி மேற்கொள்ளப்படும் என்ற உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியின் அறிவிப்பு வரவேற்க்கத்தக்கது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. அதேபோல் ஆசிரியர்கள் அவரவர் ஒன்றியங்களில் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் நலன் காக்கும் அறிவிப்பாகும். சென்னை ஐஐடி.யில் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ள வேண்டும். மத்திய குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது வரவேற்க்கத்தக்கது.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது இறப்பர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக நவீன எந்திரங்களை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும். காவிரி&குண்டாறு&வைகை இணைப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்காததற்கு திமுக தான் காரணம். அவர்கள் தொடர்ந்த வழக்கு தான் இதற்கு காரணம். எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்தால் அதற்கு அதிமுக அரசு தான் காரணமாக இருக்கும். அதிமுக கூட்டணியில் தமாகா உள்ளது. இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சியில் நல்லாட்சி அமைக்கும்.
கடந்த 3 மாதங்களாகவே தமாகா உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் வரும் 22ம் தேதி திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் 20 மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். அடுத்த கட்டமாக 23ம் தேதி சென்னையில் இதர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். திமுக.விற்கு உள்ளாட்சி தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதால் அதை திசை திருப்பும் வகையில் தேர்தல் ஆணையர் மாற்றத்தை விமர்சனம் செய்கின்றனர். தமாகா குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மக்களை சென்று அடைந்துள்ளது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சர்வாதிகாரியை போல் செயல்படுவேன் என்று கூறியுள்ளது குறித்த கேள்விக்கு வாசன் பதில் கூறுகையில், நாங்கள் காந்திய வழியில் தான் செயல்படுவோம். அந்த வழியில் தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்றார்.
சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிடுவதாக வெளிவந்து செய்தி குறித்த கேள்விக்கு வாசன் பதில் கூறுகையில், இது குறித்த வாக்காளர்கள் தகுந்த முடிவு எடுப்பார்கள் என்றார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.