ETV Bharat / state

இலவச பார்க்கிங் ரத்து - திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன்

திருச்சி: விமான நிலையத்தில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் கிடையாது என்று விமான நிலைய இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Mar 23, 2019, 3:16 PM IST

திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன்

திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், "வரும் ஏப்ரல் 1ஆம் முதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. இனி விமான நிலைய ஆணையமே நேரடியாக பார்க்கிங் கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு, ஆறு மாதங்கள் கழித்து குறைபாடு இல்லாத வகையில் ஒப்பந்தம் கோரப்படும்.

அதன்படி முதல் அரை மணி நேரம் வரை பேருந்து, வேன் போன்ற வாகனங்களுக்கு 30 ரூபாயும், இதர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 48 மணி நேரம் வரை வாகனங்கள் கட்டண அடிப்படையில் நிறுத்தலாம். முன் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு மேலும் நிறுத்தலாம்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் என்ற ஓய்விடத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தொடங்குகிறது. இதில் பிசினஸ் கிளாஸ் பயணிகள் தங்கலாம். எக்கனாமி கிளாஸ் பயணிகள் தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 900 ரூபாய் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு உணவும் வழங்கப்படும்.

அடுத்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் சுமார் ஒன்பது அடி உயரத்தில் நிறுவப்படுகிறது. பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அலுவலர்கள் மரியாதை இல்லாமல் கையாளுவதாக எழுந்துள்ள புகார் குறித்து கவுன்சிலிங் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு விமான நிலையத்தில் வண்டிகளை நிறுத்தி வந்த வாடகை ஓட்டுநர்கள், வழியனுப்புநர்கள் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், "வரும் ஏப்ரல் 1ஆம் முதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. இனி விமான நிலைய ஆணையமே நேரடியாக பார்க்கிங் கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்துள்ளது. இதில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டு, ஆறு மாதங்கள் கழித்து குறைபாடு இல்லாத வகையில் ஒப்பந்தம் கோரப்படும்.

அதன்படி முதல் அரை மணி நேரம் வரை பேருந்து, வேன் போன்ற வாகனங்களுக்கு 30 ரூபாயும், இதர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும். அதிகபட்சம் 48 மணி நேரம் வரை வாகனங்கள் கட்டண அடிப்படையில் நிறுத்தலாம். முன் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு மேலும் நிறுத்தலாம்.

வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் என்ற ஓய்விடத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தொடங்குகிறது. இதில் பிசினஸ் கிளாஸ் பயணிகள் தங்கலாம். எக்கனாமி கிளாஸ் பயணிகள் தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 900 ரூபாய் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு உணவும் வழங்கப்படும்.

அடுத்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் சுமார் ஒன்பது அடி உயரத்தில் நிறுவப்படுகிறது. பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அலுவலர்கள் மரியாதை இல்லாமல் கையாளுவதாக எழுந்துள்ள புகார் குறித்து கவுன்சிலிங் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு விமான நிலையத்தில் வண்டிகளை நிறுத்தி வந்த வாடகை ஓட்டுநர்கள், வழியனுப்புநர்கள் ஆகியோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


Body:திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் கிடையாது என்று இயக்குனர் குணசேகரன் அறிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், திருச்சி விமான நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் தனியாருக்கு ஒப்பந்த முறையில் வழங்கப்பட்டுள்ளது. இங்கு கட்டணம் வசூல் செய்வதில் குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் தரப்பில் இருந்து பல புகார்கள் வந்துள்ளது. இதை அடிப்படையாக கொண்டு பார்க்கிங் கட்டண வசூலை முறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே நேரடியாக பார்க்கிங் கட்டணத்தை வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு என ஓய்வுபெற்ற ராணுவத்தினர் 12 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் இந்த கட்டண வசூலில் ஈடுபடுவார்கள். ஆறு மாத காலத்திற்கு வெள்ளோட்டமாக ஆணையம் வசூல் செய்யும். இதில் உள்ள அம்சங்கள் ஆராயப்பட்டு ஆறு மாதங்கள் கழித்து குறைபாடு இல்லாத வகையில் டெண்டர் விடப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச பார்க்கிங் நேரம் ரத்து செய்யப்படுகிறது. முதல் அரை மணி நேரம் வரை பேருந்து, வேன் போன்ற வாகனங்களுக்கு 30 ரூபாயும், இதர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படும்.
அதிகபட்சம் 48 மணி நேரம் வரை வாகனங்கள் கட்டண அடிப்படையில் நிறுத்தலாம். அதற்குமேல் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்த முடியாது. தேவைப்பட்டால் முன் அனுமதி பெற்று இரண்டு நாட்களுக்கு மேல் நிறுத்தலாம். ஒப்பந்தக்காரர் மூலம் தற்போது மாதம் 30 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது புதிய நடைமுறையால் இந்த அளவுக்கு வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அடுத்ததாக விமான நிலையம் தரப்பில் ஆட்கள் தேர்வு தொடர்பாக எவ்வித விளம்பரமும் செய்ய செய்ய மாட்டோம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்படும். அதனால் பொதுமக்கள் யாரும் தனியார் விளம்பரங்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திருச்சி விமான நிலையத்தில் எக்ஸிக்யூட்டிவ் லாஞ்ச் என்ற ஓய்விடத்தை மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தொடங்குகிறது. இதில் பிசினஸ் கிளாஸ் பயணிகள் தங்கலாம். எக்கனாமி கிளாஸ் பயணிகள் தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு 900 ரூபாய் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு உணவும் வழங்கப்படும். அடுத்த வாரம் திருச்சி விமான நிலையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் நிறுவப்படுகிறது. சுமார் 9 அடி உயரத்தில் இந்த கோபுரம் நிறுவப்படுகிறது. பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மரியாதை இல்லாமல் கையாளுவதாக எழுந்துள்ள புகார் குறித்து கவுன்சிலிங் நடத்தப்படும் என்றார்.


Conclusion:ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மாதிரி வடிவம் திருச்சி விமான நிலையத்தில் நிறுவப்பட உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.