ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல்

author img

By

Published : Jun 29, 2023, 9:54 AM IST

திருச்சி விமான நிலையத்தில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 910 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

திருச்சி: சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையும், டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் சட்ட விரோதமாக கரன்சி நோட்டுகளை கடத்தி செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பயணிகளின் உடைமைகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவரது கைப்பை, பர்ஸ் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் யுஏஇ (திர்ஹம்) என்ற அரபு நாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. யுஏஇ திர்ஹம்சை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சியின் இந்திய ரூபாய் மதிப்பு 9 லட்சத்து 17 ஆயிரத்து 910 ரூபாய் என தெரிய வந்தது. மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரன்சி நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதா அல்லது இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக கரன்சிகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள் உள்பட உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும், கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே கடத்தலில் ஈடுபட்டு சிக்குபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜவுளி வியாபாரி கடத்தல்; துப்பாக்கிகளுடன் 6 பேர் கைது - திருச்சியில் நடந்தது என்ன?

திருச்சி: சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட‌ நாடுகளுக்கு சர்வதேச விமான சேவையும், டெல்லி, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையும் இயக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.

அப்போது, விமானத்தில் பயணம் செய்யும் பயணி ஒருவர் சட்ட விரோதமாக கரன்சி நோட்டுகளை கடத்தி செல்வதாக மத்திய புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பயணிகளின் உடைமைகளை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவரது கைப்பை, பர்ஸ் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் யுஏஇ (திர்ஹம்) என்ற அரபு நாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. யுஏஇ திர்ஹம்சை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் பறிமுதல் செய்த வெளிநாட்டு கரன்சியின் இந்திய ரூபாய் மதிப்பு 9 லட்சத்து 17 ஆயிரத்து 910 ரூபாய் என தெரிய வந்தது. மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரன்சி நோட்டுகள் கடத்தலில் ஈடுபட்ட நபர் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் அவர் மீது உள்ளதா அல்லது இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக கரன்சிகளை சட்ட விரோதமாக கடத்திச் செல்கின்றனர் என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீப காலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள் உள்பட உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தாலும், கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஆகவே கடத்தலில் ஈடுபட்டு சிக்குபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜவுளி வியாபாரி கடத்தல்; துப்பாக்கிகளுடன் 6 பேர் கைது - திருச்சியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.