ETV Bharat / state

தம்பியை கொலை செய்த அண்ணன்கள் கைது!

திருச்சி: முசிறி அருகே சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தம்பியை கொலை செய்த அண்ணன்கள் கைது!
தம்பியை கொலை செய்த அண்ணன்கள் கைது!
author img

By

Published : May 4, 2021, 9:39 PM IST

திருச்சி மாவட்டம் முசிறி அருகேவுள்ள அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள். இதில், இளைய மகன் லாரி ஓட்டுநர் ரவிக்குமார் (32). நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரில் மனைவி நந்தினியுடன் வசித்து வந்தார்.

திருமணமாகாத நிலையில் இருந்த செல்லையாவின் இரண்டாவது மகன் சிவகுமார் தந்தையுடன் அமராவதி சாலை கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் ராஜசேகரன் என்பவரும் அதே ஊரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தந்தை செல்லையாவிற்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பார்ப்பதற்காக ரவிக்குமார் அமராவதி சாலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 3) அதே கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவருக்குச் சொந்தமான ஆடு இறந்துள்ளது. இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார்.

இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் எனக் கூறி அண்ணனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையறிந்த மூத்த மகன் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தம், தா.பேட்டை காவல் துறையினர் ரவிக்குமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரவிக்குமாரை குத்திக் கொலை செய்த அண்ணன் சிவகுமாரையும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு அண்ணன் ராஜசேகரனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேவுள்ள அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவருக்கு மூன்று மகன்கள். இதில், இளைய மகன் லாரி ஓட்டுநர் ரவிக்குமார் (32). நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி என்ற ஊரில் மனைவி நந்தினியுடன் வசித்து வந்தார்.

திருமணமாகாத நிலையில் இருந்த செல்லையாவின் இரண்டாவது மகன் சிவகுமார் தந்தையுடன் அமராவதி சாலை கிராமத்திலேயே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் ராஜசேகரன் என்பவரும் அதே ஊரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் தந்தை செல்லையாவிற்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை பார்ப்பதற்காக ரவிக்குமார் அமராவதி சாலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (மே 3) அதே கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவருக்குச் சொந்தமான ஆடு இறந்துள்ளது. இறந்த ஆட்டை சமைத்து சாப்பிடுவதற்காக சிவகுமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார்.

இதனைப் பார்த்த ரவிக்குமார் இறந்த ஆட்டை சாப்பிட வேண்டாம் எனக் கூறி அண்ணனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையறிந்த மூத்த மகன் ராஜசேகரன் சம்பவ இடத்திற்கு வந்து ரவிக்குமாரை தாக்கியுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து தம்பி ரவிக்குமாரை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரவிக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தம், தா.பேட்டை காவல் துறையினர் ரவிக்குமார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ரவிக்குமாரை குத்திக் கொலை செய்த அண்ணன் சிவகுமாரையும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு அண்ணன் ராஜசேகரனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.