ETV Bharat / state

‘மோடி தயவால்தான் பழனிசாமி முதலமைச்சராக நீடிக்கிறார்’ - முத்தரசன் தாக்கு - communist leader mutharasan

திருச்சி: மோடி தயவால்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

mutharasan
author img

By

Published : Nov 25, 2019, 11:23 PM IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ‘எடப்பாடி பழனிசாமி இன்று முதலமைச்சர் ஆக நீடிப்பது மோடியின் தயவில்தான். ஆளுங்கட்சி திடீரென மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. மறைமுகத் தேர்தல் நடத்துவதன் மூலம் பலவிதமான முறைகேடுகள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகள் அனைத்தும் நடப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். அத்தகைய முறைகேடுகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் தாங்கள் கைப்பற்றிவிட வேண்டும் என ஆளுங்கட்சி கருதுகிறது. இத்தகைய செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Communist Leader Mutharasan

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், முதியவர்கள், பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். தற்போது ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, காஷ்மீரை போல் அங்கும் வீடுகள் தோறும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மீனவர்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. இலங்கை நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருகிறார். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தால் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி இது குறித்து தெளிவாகப் பேசி முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - முத்தரசன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ‘எடப்பாடி பழனிசாமி இன்று முதலமைச்சர் ஆக நீடிப்பது மோடியின் தயவில்தான். ஆளுங்கட்சி திடீரென மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது. மறைமுகத் தேர்தல் நடத்துவதன் மூலம் பலவிதமான முறைகேடுகள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகள் அனைத்தும் நடப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். அத்தகைய முறைகேடுகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் தாங்கள் கைப்பற்றிவிட வேண்டும் என ஆளுங்கட்சி கருதுகிறது. இத்தகைய செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

Communist Leader Mutharasan

இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், முதியவர்கள், பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். தற்போது ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, காஷ்மீரை போல் அங்கும் வீடுகள் தோறும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மீனவர்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. இலங்கை நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருகிறார். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தால் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி இது குறித்து தெளிவாகப் பேசி முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க: பாஜகவின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - முத்தரசன்!

Intro:பிரதமர் மோடி தயவால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நீடிக்கிறார் என்று முத்தரசன் கூறினார்.Body:Visual will sent in next file

திருச்சி:
பிரதமர் மோடி தயவால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நீடிக்கிறார் என்று முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை வகித்தார். மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுங்கட்சி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறது. திடீரென்று மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.
ஏன் இந்த அவசரம் என்று தெரியவில்லை.
மறைமுகத் தேர்தல் நடத்துவதன் மூலம் பலவிதமான முறைகேடுகள், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகள் அனைத்தும் நடப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். அத்தகைய முறை கேடுகளை உருவாக்கி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் தாங்கள் கைப்பற்றி விட வேண்டும். தங்களுக்குள்ள ஆட்சி, அதிகாரம், பலம், படை பலம் மத்திய அரசின் ஆதரவு ஆகியவற்றை பயன்படுத்தி முறையீடு செய்வதற்கான முயற்சியை மாநில அரசு மேற்கொள்வதாக கருதுகிறோம். இத்தகைய ஜனநாயக விரோதமான செயல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. ஜனநாயக முறையில், நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜக அத்துமீறி மத்திய ஆட்சியை பயன்படுத்தி குடியரசுத் தலைவர் மூலம் அந்த மாநிலத்தின் ஆளுநரை கைப்பாவையாக பயன்படுத்தி தங்களது ஆட்சியை கொல்லைப்புற வழியாக இரவோடு இரவாக அமைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை. தங்களது கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து பிற கட்சிகளை உடைத்து தங்களது கட்சியில் சேர்ப்பது, ராஜினாமா செய்ய வைப்பது, மீண்டும் அவர்களை தங்களது கட்சியின் வேட்பாளராக போட்டியிடச் செய்வது போன்ற செயலை தொடர்ந்து பாஜக மேற்கொண்டு வருகிறது. இது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. இது ஒரு சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்ற வந்துள்ளவர்கள் ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர்கள் தான்
ஒருவர் அந்த நாட்டின் அதிபராக இருந்தார். மற்றொருவர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார். அவர்கள் இருவரும் அந்த பொறுப்பில் இருந்தபோது இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எத்தகைய கொடுமை இழைக்கப்பட்டது என்பதை உலகம் அறியும். லட்சக்கணக்கான அப்பாவி மக்கள், முதியவர்கள், பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். தற்போது ஆட்சிக்கு வந்த சிலநாட்களிலேயே தமிழர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு, காஷ்மீரை போல் அங்கும் வீடுகள் தோறும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மீனவர்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை. தமிழர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் அதிபர் இந்தியாவிற்கு வருகிறார். இலங்கை தமிழ் மக்கள் காப்பாற்றபட வேண்டும், உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்தால், தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி இது குறித்து தெளிவாக பேசி முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் பழைய சூழ்நிலை இலங்கையில் திரும்ப ஏற்படும். மேலவளவு குற்றவாளிகளுக்கு தண்டனை காலம் முடிவதற்கு முன்பாகவே அவசரமாக விடுதலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதேபோல் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. இத்தகைய முடிவு தவறானதாகும். மத்திய அரசு சமூக நீதிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிற்படுத்தப்பட்டவர்களுகான 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. மருத்துவ கல்லூரியில் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சேரவேண்டிய எண்ணிக்கையில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு முழுமையாக உறுதியாக அமல்படுத்த வேண்டும். மாநில அரசும் இதை வலியுறுத்த வேண்டும். பாஜக இயங்குவது சொந்த புத்தியில் இல்லை. பாஜக அதிமுக.வை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை குருமூர்த்தி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குருமூர்த்தி போன்ற சிலர் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போகிறார். அவர் தான் வருங்கால முதல்வர் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினி கட்சி தொடங்கும் தேதி, பெயர், கொடி கொள்கை போன்றவற்றை இதுவரை அவர் அறிவிக்கவில்லை. அவர் சொல்லாத ஒன்றை, அவர் செயல்படுத்தாத ஒன்றை வெளியில் இருப்பவர்கள் வெறும் வாயை மெல்லும் செயலில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக நீடித்துக் கொண்டிருப்பது மோடியால் தான். உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டு மக்கள் நம்புகிறார்கள் நானும் நம்புகிறேன் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.