திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 575ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று வரை 889 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 92 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 6 ஆயிரத்து 560 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது வரை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உள்ளது. 895 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.