தமிழ்நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் 5 ஆயிரத்து 652 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆகும். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 559 ஆகும்.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 16) ஒரே நாளில் 98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 114ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 15) வரை 870 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 99 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 113 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இன்று இருவர் உயிரிழந்தனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் 867 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.