திருச்சி: மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அரசு பணிகளை டெண்டர் எடுத்து வேலை செய்து வருகிறார்.அதன்படி புத்தாநத்தத்தில் புதிய போர்வெல் மின் மோட்டார் மற்றும் பைப்லைன் அமைப்பது தொடர்பாக 4 லட்சத்திற்கு வேலை செய்ததற்கான பில்லை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொள்ள ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனை அணுகியுள்ளார்.
அதற்கு 6 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என்று வெகட்ராமன் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத முகமது இஸ்மாயில் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அதன் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முஹம்மது இஸ்மாயிலிடமிருந்து லஞ்சப் பணம் வாங்கும்போது வெங்கட்ராமனை கையும்,களவுமாக பிடிதத்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் புதிதாக செய்யப்பட்ட தேரின் வெள்ளோட்டம்