ETV Bharat / state

'இடைத்தேர்தலில் தமிழ்நாடு இதுவரை கண்டிராத வெற்றி' - வெல்லமண்டி நடராஜன்

author img

By

Published : Oct 25, 2019, 4:33 AM IST

Updated : Oct 26, 2019, 7:38 PM IST

திருச்சி: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு இதுவரை கண்டிராத வெற்றியை அதிமுக பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டலம் சார்பாக புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தனர். புதிதாக தொடங்கிவைக்கப்பட்ட மூன்று குளிர்சாதன பேருந்துகளில் இரண்டு பேருந்து திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கும் ஒரு பேருந்து திருச்சியிலிருந்து பழனிக்கும் இயக்கப்பட உள்ளது.

பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சர்கள்

இந்தப் பேருந்துகளில் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரூ.225 ஆகவும் திருச்சியிலிருந்து பழனிக்கு ரூ.175 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் குளிர்சாதன வசதியுடன், ஒவ்வொரு சீட்டுக்கும் அலைபேசிக்கான சார்ஜர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து சென்னைக்கு மட்டுமே அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது முதன் முதலாக கோவைக்கும் பழனிக்கும் இயக்கப்படுகிறது.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு இதுவரை கண்டிராத வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போடறா வெடியா....லோக்கல் திரையரங்கு முதல் ஐமேக்ஸ் வரை 'பிகில்' ஆட்டம் வெறித்தனம்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் திருச்சி மண்டலம் சார்பாக புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தனர். புதிதாக தொடங்கிவைக்கப்பட்ட மூன்று குளிர்சாதன பேருந்துகளில் இரண்டு பேருந்து திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கும் ஒரு பேருந்து திருச்சியிலிருந்து பழனிக்கும் இயக்கப்பட உள்ளது.

பேருந்துகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்த அமைச்சர்கள்

இந்தப் பேருந்துகளில் திருச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு ரூ.225 ஆகவும் திருச்சியிலிருந்து பழனிக்கு ரூ.175 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகளில் குளிர்சாதன வசதியுடன், ஒவ்வொரு சீட்டுக்கும் அலைபேசிக்கான சார்ஜர் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து சென்னைக்கு மட்டுமே அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது முதன் முதலாக கோவைக்கும் பழனிக்கும் இயக்கப்படுகிறது.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு இதுவரை கண்டிராத வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அரசு விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போடறா வெடியா....லோக்கல் திரையரங்கு முதல் ஐமேக்ஸ் வரை 'பிகில்' ஆட்டம் வெறித்தனம்!

Intro:திருச்சியில் இருந்து கோவை பழனிக்கு குளிர்சாதன பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.Body:
திருச்சி:
திருச்சியில் இருந்து கோவை பழனிக்கு குளிர்சாதன பேருந்து வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம் சார்பில் புதிய குளிர்சாதன பேருந்து தொடக்க விழா நடந்தது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த இந்த விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட மூன்று குளிர்சாதன பேருந்துகளில் இரண்டு திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கும், மற்றொரு பேருந்து திருச்சியில் இருந்து பழனிக்கும் இயக்கப்பட உள்ளது.
இந்தப் பேருந்துகள் குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே நின்று சொல்லும். திருச்சியில் இருந்து கோவை செல்லும் பேருந்து குளித்தலை கரூர், காங்கேயம், பல்லடம் ஆகிய பேருந்து நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். அதேபோல் பழனி செல்லும் பேருந்து மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பேருந்து நிலையங்களில் நின்று செல்லும். திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு 225 ரூபாயும், திருச்சியிலிருந்து பழனிக்கு 175 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது. இந்த பேருந்துகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் சார்ஜர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்து பயண கட்டண விபரம் பேருந்துகளின் படிக்கட்டுக்கு அருகே எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியிலிருந்து சென்னைக்கு மட்டுமே அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது முதன் முதலாக கோவைக்கும், பழனிக்கும் இயக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவைத் தொடர்ந்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி எழில் மிகுந்த நகரமாக மாற உள்ளது. அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு சாலைகள் மேம்படுத்தப்படும்.
அரசு விரைவு பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பேருந்துகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகள் ஜப்தி செய்யப்படும். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தியாகராஜ பாகவதர், பெரும்பிடுகு முத்தரையர், பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஏரி, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. தொடர்ந்து தூர்வாரப்படும் என்றார்.Conclusion:
Last Updated : Oct 26, 2019, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.