ETV Bharat / state

'என்.இ.பி.2020 குறித்து ஆராய இரண்டு வல்லுநர் குழுக்களை அரசு அமைத்துள்ளது' - முதலமைச்சர் தகவல்

author img

By

Published : Sep 16, 2020, 7:37 PM IST

சென்னை : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் கல்வியாளர்களைக் கொண்ட இரண்டு வல்லுநர் குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

என்.இ.பி.2020 குறித்து ஆராய இரு வல்லுநர் குழுக்களை அரசு அமைத்துள்ளது - முதலமைச்சர் தகவல்
என்.இ.பி.2020 குறித்து ஆராய இரு வல்லுநர் குழுக்களை அரசு அமைத்துள்ளது - முதலமைச்சர் தகவல்

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 16) கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சியினர் புதிய கல்விக்கொள்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய அவர், "புதிய தேசிய கல்விக் கொள்கை(என்.இ.பி. 2020) குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாக, தெளிவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இது தேசிய கல்விக் கொள்கை. ஒரு கொள்கை வருகின்றபொழுது அதை ஆய்வு செய்ய வேண்டும். எனவே தான் அதனை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவும், அதேபோல உயர்கல்வித் துறை சார்பாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

அந்த இரு குழுக்களும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்தை ஆராய்ந்து சரியான பரிந்துரைகளை வழங்கும். குழுக்கள் கொடுக்கின்ற அறிக்கையைப் பொறுத்து நாம் முடிவு செய்யலாம். குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். நமக்கு அதில் உள்ள சாதக, பாதகங்களை நன்கு அறிந்து அதற்குத் தகுந்தவாறு அரசு நடவடிக்கை எடுக்கும். காங்கிரஸ் கட்சியினுடைய சட்டப்பேரவை தலைவர் என்.இ.பி. 2020 குறித்த உண்மையை மறைக்கிறார்.

நாங்கள் அதனை முழுமையாக ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக இங்கே தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது. உங்களுடைய (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில் தான் இந்தியை முதலில் திணித்தீர்கள். இப்போது, இந்தி திணிப்பைக் குறித்து நீங்கள் பேசுவது, வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. மும்மொழிக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு காலத்தில் போராடினீர்கள். ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி. அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி தொடர்ந்து இருமொழிக் கொள்கையை தான் நாங்கள் பின்பற்றுவோம். இதில் இருவேறு கருத்தில்லை.

உங்களால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் பெற முடியவில்லை. நீட்டை பற்றி நான் பேசக்கூடாது என்று இருந்தேன். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரே பேசுகின்றபொழுது, அதைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2010ஆம் ஆண்டில் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தயவு செய்து மனசாட்சியோடு சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அதை யார் கொண்டு வந்தது, காங்கிரஸ் கட்சி. மீண்டும் சீராய்வு மனு யார் போட்டது? அதே காங்கிரஸ் கட்சி தான்.

இவ்வளவு செய்துவிட்டு பேசுகின்றீர்களே? நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து செய்தியும் வெளியில் வருகிறது. எது உண்மைக்கு புறம்பான செய்தி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இதற்குள்ளே நான் ஆழமாக செல்லவில்லை. ஏனென்றால் காலநேரம் போதுமானதாக இல்லை" என தெரிவித்தார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று (செப்டம்பர் 16) கேள்வி நேரத்தில் விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சியினர் புதிய கல்விக்கொள்கை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசிய அவர், "புதிய தேசிய கல்விக் கொள்கை(என்.இ.பி. 2020) குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை விளக்கமாக, தெளிவாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இது தேசிய கல்விக் கொள்கை. ஒரு கொள்கை வருகின்றபொழுது அதை ஆய்வு செய்ய வேண்டும். எனவே தான் அதனை ஆய்வு செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழுவும், அதேபோல உயர்கல்வித் துறை சார்பாக ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டு அந்தப் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன.

அந்த இரு குழுக்களும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சொன்ன கருத்தை ஆராய்ந்து சரியான பரிந்துரைகளை வழங்கும். குழுக்கள் கொடுக்கின்ற அறிக்கையைப் பொறுத்து நாம் முடிவு செய்யலாம். குழு கொடுக்கின்ற அறிக்கையை நாம் பரிசீலிக்கலாம். நமக்கு அதில் உள்ள சாதக, பாதகங்களை நன்கு அறிந்து அதற்குத் தகுந்தவாறு அரசு நடவடிக்கை எடுக்கும். காங்கிரஸ் கட்சியினுடைய சட்டப்பேரவை தலைவர் என்.இ.பி. 2020 குறித்த உண்மையை மறைக்கிறார்.

நாங்கள் அதனை முழுமையாக ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக இங்கே தெரிவித்திருக்கின்றோம். எங்களுடைய கொள்கை இருமொழிக் கொள்கை. அதில் பின்வாங்குவது கிடையாது. உங்களுடைய (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில் தான் இந்தியை முதலில் திணித்தீர்கள். இப்போது, இந்தி திணிப்பைக் குறித்து நீங்கள் பேசுவது, வேடிக்கையாக இருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. மும்மொழிக் கொள்கையை எப்படியாவது தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என ஒரு காலத்தில் போராடினீர்கள். ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது எடுத்துக் கொண்ட அக்கறைக்கு நன்றி. அதிமுகவாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி தொடர்ந்து இருமொழிக் கொள்கையை தான் நாங்கள் பின்பற்றுவோம். இதில் இருவேறு கருத்தில்லை.

உங்களால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் பெற முடியவில்லை. நீட்டை பற்றி நான் பேசக்கூடாது என்று இருந்தேன். காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவரே பேசுகின்றபொழுது, அதைப் பற்றி பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். 2010ஆம் ஆண்டில் யார் ஆட்சியில் இருந்தார்கள்? தயவு செய்து மனசாட்சியோடு சொல்லுங்கள். காங்கிரஸ் கட்சிதான் இருந்தது. அதை யார் கொண்டு வந்தது, காங்கிரஸ் கட்சி. மீண்டும் சீராய்வு மனு யார் போட்டது? அதே காங்கிரஸ் கட்சி தான்.

இவ்வளவு செய்துவிட்டு பேசுகின்றீர்களே? நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து செய்தியும் வெளியில் வருகிறது. எது உண்மைக்கு புறம்பான செய்தி என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். இதற்குள்ளே நான் ஆழமாக செல்லவில்லை. ஏனென்றால் காலநேரம் போதுமானதாக இல்லை" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.