ETV Bharat / state

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை வேறிடத்திற்கு மாற்ற வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Aug 25, 2020, 3:15 PM IST

திருச்சி: பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை வேறிடத்திற்கு மாற்ற வலியுறுத்தி  திமுக ஆர்ப்பாட்டம்!
பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை வேறிடத்திற்கு மாற்ற வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்!

திருச்சி திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட 63ஆவது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் 3.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'என்னத்த களம்' என்ற களத்துமேட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 63ஆவது வார்டில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் அமைய இருக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு நேரில் சென்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்னை தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் வழங்கவில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரி திமுக சார்பில் இன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட 63ஆவது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் 3.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'என்னத்த களம்' என்ற களத்துமேட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 63ஆவது வார்டில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியில் அமைய இருக்கும் பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு நேரில் சென்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கள ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்னை தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் வழங்கினார். இருப்பினும், மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் வழங்கவில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பாதாள சாக்கடை கழிவு நீர் தேக்கத் தொட்டி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டுமென கோரி திமுக சார்பில் இன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், ஒன்றிய செயலாளர் கருணாநிதி, காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.