ETV Bharat / state

விவசாய கடன் : புதிய நடைமுறை குறித்து விளக்கமளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Oct 21, 2020, 4:33 PM IST

சென்னை : விவசாயக் கடன் பெற மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமென்ற புதிய நடைமுறை தொடர்பாக விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விவசாய கடன் : புதிய நடைமுறை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரிய நீதிமன்றம்!
விவசாய கடன் : புதிய நடைமுறை தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரிய நீதிமன்றம்!

மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக விவசாயக் கடன்களை பெற வேண்டுமென்ற விதிமுறையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடன் வழங்கும் முறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு புதிய அறிவிப்பை கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தார்.

அதில், பழைய நடைமுறைப்படி தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இனி விவசாயக் கடன்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி, அவற்றின் மூலமாக மட்டுமே கடனைப் பெற வேண்டும் என்றும் குறிப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் கிராமப்புற விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். மேலும், வங்கிக்கணக்கு தொடங்க போதிய கால அவகாசம் அளிக்காமல், இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவது விவசாயிகளை பெரும் சிரமத்திற்குள்ளாக்கும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (அக்டோபர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின் தரப்பில் ஆஜரான வழக்குழைஞர், "மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்யப்பெற்று, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கணக்குகள் தொடங்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் 2 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சம் ரூபாய் விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனிடையே மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாட்டில் மொத்தமாக 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றில் 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அத்தனை விவசாயிகளுக்கு கணக்கு தொடங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எனவே, இந்த நடைமுறையை அரசு தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

அத்துடன், பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து நபார்டு வங்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணை அக்டோபர் 28ஆம் தேதி அன்று நடைபெறும் என கூறி தள்ளிவைத்தார்.

மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலமாக விவசாயக் கடன்களை பெற வேண்டுமென்ற விதிமுறையை எதிர்த்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயக் கடன்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கடன் வழங்கும் முறைகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஒரு புதிய அறிவிப்பை கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று வெளியிட்டிருந்தார்.

அதில், பழைய நடைமுறைப்படி தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக இனி விவசாயக் கடன்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்குகளைத் தொடங்கி, அவற்றின் மூலமாக மட்டுமே கடனைப் பெற வேண்டும் என்றும் குறிப்பட்டிருந்தது.

இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் கிராமப்புற விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்கள். மேலும், வங்கிக்கணக்கு தொடங்க போதிய கால அவகாசம் அளிக்காமல், இந்த புதிய நடைமுறையை அமல்படுத்துவது விவசாயிகளை பெரும் சிரமத்திற்குள்ளாக்கும். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று (அக்டோபர் 21) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின் தரப்பில் ஆஜரான வழக்குழைஞர், "மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கான விண்ணப்பங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் விவசாயிகள் மூலம் பூர்த்தி செய்யப்பெற்று, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கணக்குகள் தொடங்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள 36 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 90 ஆயிரத்து 33 விவசாயிகளுக்கு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் 2 ஆயிரத்து 256 கோடியே 21 லட்சம் ரூபாய் விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

இதனிடையே மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "தமிழ்நாட்டில் மொத்தமாக 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. அவற்றில் 90 லட்சம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், அத்தனை விவசாயிகளுக்கு கணக்கு தொடங்க நீண்ட கால அவகாசம் தேவைப்படும். எனவே, இந்த நடைமுறையை அரசு தற்காலிகமாக நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "விவசாயிகள் பயிர்க்கடன்களை உடனடியாக பெற முடியாது என்பதால், இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

அத்துடன், பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறை குறித்து நபார்டு வங்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் மேலதிக விசாரணை அக்டோபர் 28ஆம் தேதி அன்று நடைபெறும் என கூறி தள்ளிவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.