ETV Bharat / state

மாணவியைத் தாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் அதிரடி! - குருநாதன்

திருப்பூர்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவியை கொடூரமாக தாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாணவியை தாக்கிய இளைஞருக்கு ஆயுள் தண்டனை
author img

By

Published : Jun 27, 2019, 12:12 PM IST

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை, அலங்கியம் நால் சாலையைச் சேர்ந்த குருநாதன் (26) என்பவர் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த குருநாதன், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த மாணவி மறுத்துவிட்டதால் தான் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். அது மட்டும்மில்லாமல் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இவர்கள் இருவரும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குருநாதனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியை தாக்கிய இளைஞர்
இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு குருநாதனுக்கு கொலை முயற்சிக்காக ஆயுள் தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து குருநாதனை காவல்துறையினர் கோவை சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை, அலங்கியம் நால் சாலையைச் சேர்ந்த குருநாதன் (26) என்பவர் வெகு நாட்களாக காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த குருநாதன், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த மாணவி மறுத்துவிட்டதால் தான் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளான். அது மட்டும்மில்லாமல் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்.

இவர்கள் இருவரும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர்கள் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குருநாதனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியை தாக்கிய இளைஞர்
இந்த வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு குருநாதனுக்கு கொலை முயற்சிக்காக ஆயுள் தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனையடுத்து குருநாதனை காவல்துறையினர் கோவை சிறையில் அடைத்தனர்.
Intro:திருப்பூரில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்திய வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
Body:திருப்பூர் காங்கேயம் சாலையில் வசித்து வரும் 17 வயது பள்ளி மாணவி அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்தாள், அப்போது அலங்கியம் நால் ரோட்டை சேர்ந்த குருநாதன்(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதனிடையே இருவரின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பெண்ணின் பெற்றோர் உறவினர் ஒருவருடன திருமண ஏற்பாடு செய்தனர். இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றுவிட்டு திரும்பிய மாணவியை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த குருநாதன் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான். ஆனால் மாணவி மறுக்கவே ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கண்ணாடி பாட்டிலால் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளான். இதனால் மாணவி படுகாயம் அடைந்தார். இந்நிலையில் குருநாதன் தான் வைத்திருந்த பாட்டிலால் தன்னை தானே குத்திகொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். பின்னர் இருவரும் படுகாயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிய பட்டு பின்னர் குருநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இவ்வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் குருநாதனுக்கு கொலை முயற்சிக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் மாணவியை தாக்கியதற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து குருநாதனை கோவை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.