ETV Bharat / state

ஜின்னா அன்று செய்த வேலையை திமுக, காங்கிரஸ் இன்று செய்கின்றன - பொன். ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jan 29, 2020, 8:01 AM IST

Updated : Jan 30, 2020, 10:10 AM IST

திருப்பூர்: முகமது அலி ஜின்னா அன்று செய்த வேலையை இன்று திமுகவும், காங்கிரஸ் கட்சியும் செய்துவருகின்றன என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் பொன் ராதாகிருஷ்ணன்  முகமது அலி ஜின்னா  மத்திய இணையமைச்சர்  union minister pon radhakrishnan compares dmk with jinna
பொன். ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டதை ஆதரித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிகழ்வில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.

தெருமுனை பரப்புரைக்கூட்டம்

அஸ்ஸாம் மாநிலத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜேஎன்யூ மாணவர் பிகாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அன்று ஜின்னா இந்தியாவைப் பிரித்தார். அதே வேலையை இன்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200 விழுக்காடு நான் ஆதரிக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி - பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டதை ஆதரித்து திருப்பூர் தாராபுரம் சாலையில் தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிகழ்வில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் தமிழ்நாட்டில், இந்தியாவில் உள்ள எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.

தெருமுனை பரப்புரைக்கூட்டம்

அஸ்ஸாம் மாநிலத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜேஎன்யூ மாணவர் பிகாரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை.

பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

அன்று ஜின்னா இந்தியாவைப் பிரித்தார். அதே வேலையை இன்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200 விழுக்காடு நான் ஆதரிக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: புதிய மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி - பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர்

Intro:தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்றால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழை கட்டாயம் வழிபாட்டு மொழியாக்க முடியுமா என திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆதரவு தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டிBody:

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து திருப்பூரில் தாராபுரம் சாலையில் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தமிழகத்திலும் இந்தியாவிலும் எந்த ஒரு மதத்திற்கும் பாதிப்பில்லை என்பதை தெரிவிக்கும் விதமாகவே பாஜக சார்பில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்ற எனவும் அசாமை தனிநாடாக ஆக்க வேண்டும் என சதித்திட்டத்தோடு செயல்பட்ட ஜே.என்.யூ மாணவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார் . இதுபோல பிரிவினைவாத சக்திகளை வேடிக்கை பார்த்துகொண்டிருப்பதா என கேள்வி எழுப்பினார் . முகமது அலி ஜின்னா , காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய மூவருக்கும் எந்த வேற்றுமையும் இல்லை . அன்று அவர் இந்தியாவை பிரித்தார் இன்று காங்கிரஸ் திமுக அதே வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் ,தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு என்பதை 200% ஆதரிக்கிறேன் ஆனால் தமிழகத்தின் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் தமிழில் வழிபடுவதை உறுதி செய்திட முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார்.இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேட்டி : பொன்.ராதாகிருஷ்ணன் , முன்னால் மத்திய இணையமைச்சர்Conclusion:
Last Updated : Jan 30, 2020, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.