ETV Bharat / state

சரக்கு வேனும் காரும் மோதி விபத்து: 35 தொழிலாளர்கள் காயம் - விபத்து செய்திகள்

திருப்பூர்: புறவழிச்சாலையில் பூளவாடி பிரிவு அருகே வெங்காயம் பறிக்க கூலித் தொழிலாளிகளுடன் சென்ற சரக்கு வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 35 தொழிலாளர்கள் காயம் அடைந்துள்ளனர்.

சரக்கு வேனும் காரும் எதிரெதிரே மோதி விபத்து
சரக்கு வேனும் காரும் எதிரெதிரே மோதி விபத்து
author img

By

Published : Apr 1, 2021, 1:12 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரையிலிருந்து பூளவாடி நோக்கிச் சென்ற சிறிய ரக வேன் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது கோவையிலிருந்து தாராபுரம் நோக்கிவந்த கார் புதிய புறவழிச்சாலையில் வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது. அதில் 15 பெண்கள் உள்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனைவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடதாரையிலிருந்து பூளவாடி நோக்கிச் சென்ற சிறிய ரக வேன் ஒன்று சாலையைக் கடக்க முயன்றது.

அப்போது கோவையிலிருந்து தாராபுரம் நோக்கிவந்த கார் புதிய புறவழிச்சாலையில் வேன் மீது மோதியது. இதில் வேன் கவிழ்ந்தது. அதில் 15 பெண்கள் உள்பட 35 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அனைவரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.