ETV Bharat / state

‘பாஜக ஒரு கொலைகார கும்பல்' - வைகோ பாய்ச்சல்

author img

By

Published : Apr 12, 2019, 12:14 AM IST

திருப்பூர்: மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செய்வதற்கு தயாராய் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த அதிமுக அரசு கலையப்பட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

வைகோ பாய்ச்சல்

திருப்பூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் பரப்புரையில் வைகோ

இதில், “இந்த தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். கொலைகார கூட்டம் மீண்டும் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் களம் இது. இது மக்களுக்கான ஆட்சி அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களை வைத்து வாக்கு கேட்பது மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து வருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும் தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் , முல்லை பெரியாறு , உயர்மின் கோபுரம் என பலவகைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.

அதிமுக அரசு ஊழல் புகார்களால் சிக்கி மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செய்வதற்கு தயாராகி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்துவிட்டது. இந்த ஆட்சி இடைத்தேர்தல் முடிவுகளால் கலைக்கப்பட்டு சூரியன் உதிப்பதுபோல திமுக ஆட்சி அமைக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

திருப்பூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் பரப்புரையில் வைகோ

இதில், “இந்த தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். கொலைகார கூட்டம் மீண்டும் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் களம் இது. இது மக்களுக்கான ஆட்சி அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களை வைத்து வாக்கு கேட்பது மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து வருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும் தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் , முல்லை பெரியாறு , உயர்மின் கோபுரம் என பலவகைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.

அதிமுக அரசு ஊழல் புகார்களால் சிக்கி மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செய்வதற்கு தயாராகி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்துவிட்டது. இந்த ஆட்சி இடைத்தேர்தல் முடிவுகளால் கலைக்கப்பட்டு சூரியன் உதிப்பதுபோல திமுக ஆட்சி அமைக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

அதிமுக அரசின்  அமைச்சரவை மீதுள்ள ஊழல் புகார்களால் மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செயவதற்கு தயாராய் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த இந்த ஆட்சி இடைத்தேர்தல் முடிவுகளால் கலைக்கப்பட்டு சூரியன் உதிப்பதுபோல திமுக ஆட்சி அமைக்கும் என திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு 



திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார் . அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் ஜனநாயகம் காப்பாற்றப்படுமா கொலைகார கும்பல் மீண்டும் வெற்றி  பெறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் எனவும்  எங்கிருந்து வந்தாலும் தொழில்செய்து முன்னேறலாம் என கொங்கு மண்டலத்தின்  திருப்பூரை தேடி வந்த காலம் கடந்து ஜி.எஸ்.டி , ஏற்றுமதியாளர்களுக்கன டிராபேக் சதவிகிதம் குறைப்பு என தொழில்துறை பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்ட அதேசமயம் மத்திய அரசு கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக  2 லட்சத்து 42 ஆயிரம் கோடி கடணை தள்ளுபடி செய்து 5 லட்சம் கோடி வரிச்சலுகைகளையும் வழங்கியது ஆகவே இது மக்களுக்கான ஆட்சி அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி எனவும் புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீர்களை வைத்து வாக்கு கேட்பது மிகப்பெரிய ஆபத்து எனவும் இது ஜனநாயக சீரழிவு எனவும் தமிழகம் ஹைட்ரோ கார்பன் , முல்லை பெரியாறு , உயர்மின் கோபுரம் என பலவகைகளிலும் வஞ்சிக்கப்பட்டது எனவே அதிமுக அரசின்  அமைச்சரவை மீதுள்ள ஊழல் புகார்களால் மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செயவதற்கு தயாராய் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த இந்த ஆட்சி இடைத்தேர்தல் முடிவுகளால் கலைக்கப்பட்டு சூரியன் உதிப்பதுபோல திமுக ஆட்சி அமைக்கும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திருப்பூரில் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசினார் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.