ETV Bharat / state

'திமுகவின் பொய்ப் பரப்புரையை மக்கள் நம்பத் தயாரில்லை'

author img

By

Published : Jul 22, 2019, 9:52 AM IST

திருப்பூர்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் பொய்ப் பரப்புரையை இனியும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஜி.கே. வாசன் பேசியுள்ளார்.

தி.மு.க வின் பொய்பிரச்சாரத்தை மக்கள் நம்பத் தயாராகயில்லை-ஜி.கே.வாசன் பேச்சு

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் சமூக மையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே. வாசன், "நாம்தான் இனி காங்கிரஸ், நம்மால்தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் தேசிய அளவில் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது; எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும் பிரதமர் கனவிலிருந்த முன்னால் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர்.

திமுகவின் பொய்ப்பரப்புரையை மக்கள் நம்பத் தயாராகயில்லை

திமுக வெற்றிபெற்றாலும் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. திமுக கூட்டணியின் பொய்ப் பரப்புரையை தமிழ்நாட்டில் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இதன் பிரதிபலிப்பு வருகிற வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் தெரியவரும். அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பக்கபலமாக இருக்கும். மத்திய-மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய தமிழ் மாநில காங்கிரஸ் பாலமாய் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் சமூக மையத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே. வாசன், "நாம்தான் இனி காங்கிரஸ், நம்மால்தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் தேசிய அளவில் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது; எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும் பிரதமர் கனவிலிருந்த முன்னால் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர்.

திமுகவின் பொய்ப்பரப்புரையை மக்கள் நம்பத் தயாராகயில்லை

திமுக வெற்றிபெற்றாலும் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. திமுக கூட்டணியின் பொய்ப் பரப்புரையை தமிழ்நாட்டில் மக்கள் நம்பத் தயாராக இல்லை.

இதன் பிரதிபலிப்பு வருகிற வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் தெரியவரும். அதிமுக கூட்டணியே வெற்றிபெறும். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் பக்கபலமாக இருக்கும். மத்திய-மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய தமிழ் மாநில காங்கிரஸ் பாலமாய் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Intro:134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது . எதிர்கட்சி அந்தஸ்தை கூட காப்பாற்ற முடியவில்லை எனவும் இனி நாம் தான் காங்கிரஸ் நம்மால் தான் காமராஜர் ஆட்சி என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பேச்சு

Body:முன்னால் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுண்ஹாலில் நடைபெற்றது . தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அரசு மற்றும் மாற்றுத்திறாளி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாம் தான் காங்கிரஸ் , நம்மால் தான் காமராஜர் ஆட்சியை கொண்டு வர முடியும் எனவும் 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது . எதிர்கட்சி அந்தஸ்தை கூட காப்பாற்ற முடியவில்லை மேலும் பிரதமர் கனவில் இருந்த முன்னால் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர் எனவும் விமர்சித்து பேசினார் மேலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பொய்பிரச்சாரம் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது . தமிழகத்தில் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள் , இதன் மூலம் வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும் , தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றும் தோல்வியடைந்த நிலையிலேயே உள்ளது. எனவும் மத்தியிலும் , மாநிலத்திலும் நம் சார்ந்த ஆட்சியே , அதில் த.மா.கா பங்கும் உண்டும் விவசாயிகள் நலனை பாதிக்ககூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது , அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்த முயற்சித்தால் த.மா.கா எதிர்க்கும் எனவும் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய பாலமாய் இருப்போம் எனவும் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.