ETV Bharat / state

‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி - திமுக பிரமுகர் உள்பட மூவர் கைது! - ‘சதுரங்க வேட்டை’ பாணியில் அறங்கேறிய  மோசடி

திருப்பூர்: 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Three persons including DMK man
Three persons including DMK man
author img

By

Published : Feb 6, 2020, 10:27 PM IST

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோய் பாதிப்பு ஏற்படாது எனவும் ஆசைவார்த்தைகளைக் கூறி மயக்கியுள்ளனர்.

எனவே இரிடியம் தர வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதனை நம்பிய சாமிநாதன், ரூபாய் ஐந்து லட்சத்தை முன்பணமாக அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சாமிநாதனிடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் காருக்குள் இருப்பதாகவும் மீதி பணம் ரூ.20 லட்சத்தை கொடுக்குமாறும் சாமிநாதனிடம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சாமிநாதன், பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி

அவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், காரில் இருந்த மூன்று பேரையும், கைது செய்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம், தனபால், ராஜா என்பது தெரியவந்தது.

இதில் ஆறுமுகம் என்பவர் திமுக விவசாய அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கைதான மூன்று பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண்... காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர்!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், நோய் பாதிப்பு ஏற்படாது எனவும் ஆசைவார்த்தைகளைக் கூறி மயக்கியுள்ளனர்.

எனவே இரிடியம் தர வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அதனை நம்பிய சாமிநாதன், ரூபாய் ஐந்து லட்சத்தை முன்பணமாக அவர்களிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சாமிநாதனிடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் காருக்குள் இருப்பதாகவும் மீதி பணம் ரூ.20 லட்சத்தை கொடுக்குமாறும் சாமிநாதனிடம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சாமிநாதன், பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

‘சதுரங்க வேட்டை’ பாணியில் அரங்கேறிய மோசடி

அவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், காரில் இருந்த மூன்று பேரையும், கைது செய்தனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ஆறுமுகம், தனபால், ராஜா என்பது தெரியவந்தது.

இதில் ஆறுமுகம் என்பவர் திமுக விவசாய அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கைதான மூன்று பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண்... காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர்!

Intro:இரிடியம் தருவதாக கூறி ரூபாய் ஐந்து லட்சம் மோசடி திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைதுBody:திருப்பூர் மாவட்டம் மூலனூர் சேர்ந்தவர் சாமிநாதன் வயது 50 இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் ஏஜெண்டாக இருந்து வருகிறார் இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும் நோயால் பாதிப்பு ஏற்பட மாட்டாது என்று ஆசைவார்த்தை கூறி உள்ளனர் எனவே இரிடியம் தர வேண்டுமென்றால் ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் முன்பணமாக ரூபாய் 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் அதை நம்பிய சாமிநாதன் ரூபாய் ஐந்து லட்சத்தை முன்பணமாக மூன்று பேரிடம் கொடுத்துள்ளார் இந்த நிலையில் சாமிநாதன் இடம் பணம் வாங்கியவர்கள் ஒரு காரில் பெரியநாயக்கன்பாளையம் வந்துள்ளனர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரிடியம் காருக்குள் இருப்பதாகவும் மீதி பணம் 20 லட்சத்தை கொடுக்குமாறும் சாமிநாதன் இடம் கேட்டுள்ளனர் இதனால் சந்தேகம் அடைந்த சாமிநாதன் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் தகவல் தெரிவித்தார் அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து காரில் இருந்த மூன்று பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர் விசாரணையில் அவர்கள் திருப்பூர் குமாரசாமி நகரை சேர்ந்த ஆறுமுகம் என்கிற பந்தா ஆறுமுகம் சோமனூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் தனபால் திருப்பூர் குமாரசாமி நகரைச் சேர்ந்த ராஜா என்பதும் தெரியவந்தது இதில் ஆறுமுகத்துக்கு சொந்தமான கார் பறிமுதல் செய்யப்பட்டது இவர் திமுக விவசாயிகள் பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆக உள்ளார் மேலும் கைதான 3 பேர் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.