பல்லடம் அருகே புள்ளியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அன்னபூரணி. இவருக்கு சரண்யா (12) மற்றும் தேவி(19) என்று இருமகள்கள் உள்ளனர். இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.06) தேவியின் கணவர் சேதுபதி, அன்னபூரணி, சரண்யா ஆகியோர் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு குளிக்கச்சென்றனர். அங்கு அன்னபூரணி கரையில் அமர, மற்ற அனைவரும் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சரண்யா, தேவி, சேதுபதி நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் மூவரையும் இரண்டு நாள்களாக தீவிரமாகத் தேடினர்.
இந்நிலையில் இரண்டு நாள்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று(அக்.08) தேவியின் உடல் முதலில் மீட்கப்பட்டது. தொடர்ந்து சரண்யா மற்றும் சேதுபதியின் உடல் அவிநாசிபாளையம் அருகே உள்ள வாய்க்காலில் மீட்கப்பட்டது.
இதையும் படிங்க: பி.ஏ.பி வாய்க்காலில் மாயமான மூன்று பேர்- இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்!