ETV Bharat / state

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்!

author img

By

Published : Aug 6, 2020, 6:18 PM IST

திருப்பூர்: நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு...!
நொய்யல் ஆற்றில் வெள்ள பெருக்கு...!

கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலை, கோவை மாவட்டம் என நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆற்றில் கலந்து இருந்த கழிவு காரணமாக, தற்பொழுது நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மேலும் திருப்பூர் - மங்கலம் பகுதியில் அமைந்துள்ள நல்லம்மன் தடுப்பணையில், நீர் நிறைந்து தடுப்பணை நடுவே அமைந்துள்ள நல்லம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதை முழுவதும் நீரால் மூடப்பட்டு, கோயிலையும் நீர் சூழ்ந்துள்ளது.

இதையும் படிங்க...மதுரையில் 900 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் சென்டர் - முதலமைச்சர் நேரில் ஆய்வு

கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலை, கோவை மாவட்டம் என நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆற்றில் கலந்து இருந்த கழிவு காரணமாக, தற்பொழுது நொய்யல் ஆற்றில் நுரை பொங்கிய நிலையில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மேலும் திருப்பூர் - மங்கலம் பகுதியில் அமைந்துள்ள நல்லம்மன் தடுப்பணையில், நீர் நிறைந்து தடுப்பணை நடுவே அமைந்துள்ள நல்லம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதை முழுவதும் நீரால் மூடப்பட்டு, கோயிலையும் நீர் சூழ்ந்துள்ளது.

இதையும் படிங்க...மதுரையில் 900 படுக்கை வசதி கொண்ட கோவிட் கேர் சென்டர் - முதலமைச்சர் நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.