ETV Bharat / state

பில்லூர் அணையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி?: திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு..!

author img

By

Published : Jun 27, 2023, 9:09 PM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் வகையில், பில்லூர் அணையில் கேரள அரசால் அணை கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி குழு தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.

தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்ட முயற்சி
தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்ட முயற்சி

தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்ட முயற்சி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற வகையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்தும் இதனை தடுக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி குழு தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு இன்று (ஜூன் 27) அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக எதிர்க்கட்சி குழு தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் இணைந்து அளித்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சி 459 வார்டு கோம்பைத் தோட்டம், காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் பின்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது. இந்தப் பகுதி அதிகளவு மக்கள் புழக்கம்கொண்ட ஒரு பகுதியாகும். மேலும், 45 வார்டுகளை கொண்டுள்ளதனால் முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகள் அருகருகே உள்ள பகுதியாகும்.

இந்த சுத்திகரிப்பு திட்டத்தினால் காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு ஆகிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை, முன்னதாகவே பணிபுரிந்து வருகிற அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். வடக்கு பகுதியில் சாந்தி தியேட்டர், சாமுண்டிபுரம், காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அனைத்தும் ஒரே இடத்தில் வந்து சேரும் விதமாக உள்ளது.

இப்பகுதியில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து எந்த வார்டு மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தனித்தனியாக பல பிரிவுகளாகப் பிரித்து, கழிவுநீரை வெளியேற்றி நல்லாற்றுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பயன்பாட்டுக்கு வராத பாதள சாக்கடைக்கு வரி விதித்திருப்பதை ரத்து செய்து, பாதாள சாக்கடை பயன்பாட்டுக்கு வந்த பின்பு வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.

பில்லூர் அணை குறுக்கே மற்றொரு அணை கட்ட கேரள அரசு திட்டமா?: திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்தறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த மாமன்ற கூட்டத்தில் மேயரிடமும், ஆணையாளரிடமும் பில்லூர் அணையை (Pillur Dam) தடுக்கின்ற விதமாக கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை தடுக்க வேண்டும். மேலும் பில்லூர் அணைக்கு (Kerala Govt Build a Dam into Pillur Dam) வரக்கூடிய தண்ணீரை கண்காணித்து ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்க சொல்லி அ.இ.அ.தி.மு.க கழக மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக 30.05.2023 அன்று கடிதம் கொடுத்திருந்தோம்.

அதனைத் தடுக்கும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை துரிதமாக செய்ய வேண்டும். மேலும், மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி, வார்டு எண் 45-க்கு உட்பட்ட நொய்யல் வீதி டி.எஸ்.எண்: 442/3, 443/4, 445/5 காலையில் 16,000 சதுர மீட்டர் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தது. இந்நிலத்தை அப்பகுதியைச் சார்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்தார். ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி அரசு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் மேற்கண்ட முகமது சாலியா திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் OS 286/2005 ஆக தொடர்ந்து அவருக்கு பட்டா வழங்க வேண்டுமென வழக்கு போட்டிருந்தார்.

அந்த மனு மேற்படி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அது குறித்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கு பின்னர், இந்நிலத்தை திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களும், தெற்கு தாசில்தார் அவர்களும், அ.தி.மு.க முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அவர்களின் சீரிய முயற்சியில் பாதுகாப்பு செய்தனர். பின்னர் அப்பகுதி கம்பி வேலி அமைத்து எம்.கண்ணப்பன், அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க அ.இ.அ.தி.மு.கழக கவுன்சிலர் இடத்தில் அப்பகுதி மக்களுக்கான மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட ஆவணம் செய்யப்பட்டது. அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பலகோடி ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள அந்த நிலத்தை ஒரு சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிகிறோம். எனவே, பலகோடி மதிப்புள்ள இந்த அரசு நிலத்தை பாதுகாக்கவும், அந்நிலத்தில் பள்ளி கட்டடம் அமைத்து அப்பகுதி மக்கள் பயன்பட வழிவகை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், கவுன்சிலர்கள் தங்கராஜ், ஆர்.ஏ.சேகர், தம்பி என்ற சின்னச்சாமி, முத்துசாமி, நா.கணேசன், சகுந்தலா ஈஸ்வரன், சாந்தி பாலசுப்பிரமணியம், தனலட்சுமி ராமசாமி, ஆனந்தி சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வி கனகராஜ் உள்ளிட்ட பலரும் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி.க்கு வந்த ஓலை - பரபரப்பான பின்னணி?

தமிழகத்திற்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கும் விதத்தில் கேரள அரசு அணை கட்ட முயற்சி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய தண்ணீரை தடுக்கின்ற வகையில் கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்தும் இதனை தடுக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சி குழு தலைவர் ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் மனு இன்று (ஜூன் 27) அளித்துள்ளனர்.

இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சியின் அதிமுக எதிர்க்கட்சி குழு தலைவரும், 42 வது வார்டு கவுன்சிலருமான ஆர்.அன்பகம் திருப்பதி தலைமையிலான அதிமுக கவுன்சிலர்கள் 17 பேர் இணைந்து அளித்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சி 459 வார்டு கோம்பைத் தோட்டம், காயிதே மில்லத் நகர் பள்ளிவாசல் பின்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது. இந்தப் பகுதி அதிகளவு மக்கள் புழக்கம்கொண்ட ஒரு பகுதியாகும். மேலும், 45 வார்டுகளை கொண்டுள்ளதனால் முக்கிய செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவைகள் அருகருகே உள்ள பகுதியாகும்.

இந்த சுத்திகரிப்பு திட்டத்தினால் காற்று மாசு, நிலத்தடி நீர் மாசு ஆகிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என இப்பகுதி பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களை, முன்னதாகவே பணிபுரிந்து வருகிற அந்தந்தப் பகுதிகளிலேயே பணியில் அமர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். வடக்கு பகுதியில் சாந்தி தியேட்டர், சாமுண்டிபுரம், காந்தி நகர், பெரியார் காலனி, அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அனைத்தும் ஒரே இடத்தில் வந்து சேரும் விதமாக உள்ளது.

இப்பகுதியில் புதியதாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டம் தயாராகி வருவதாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட வார்டுகளின் மாமன்ற உறுப்பினர்களை கலந்து ஆலோசித்து எந்த வார்டு மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் தனித்தனியாக பல பிரிவுகளாகப் பிரித்து, கழிவுநீரை வெளியேற்றி நல்லாற்றுக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பயன்பாட்டுக்கு வராத பாதள சாக்கடைக்கு வரி விதித்திருப்பதை ரத்து செய்து, பாதாள சாக்கடை பயன்பாட்டுக்கு வந்த பின்பு வரி விதிப்பு குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.

பில்லூர் அணை குறுக்கே மற்றொரு அணை கட்ட கேரள அரசு திட்டமா?: திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தப்புள்ளி விபரத்தில் முழுமையான விதிமுறைகளை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட சுகாதாரத்தறை அதிகாரிகள் மற்றும் அனைத்து மாமன்ற உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த மாமன்ற கூட்டத்தில் மேயரிடமும், ஆணையாளரிடமும் பில்லூர் அணையை (Pillur Dam) தடுக்கின்ற விதமாக கேரள அரசு அணை கட்ட முயற்சி செய்து வருவதை தடுக்க வேண்டும். மேலும் பில்லூர் அணைக்கு (Kerala Govt Build a Dam into Pillur Dam) வரக்கூடிய தண்ணீரை கண்காணித்து ஆய்வு செய்து அதனை தடுப்பதற்கு மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்க சொல்லி அ.இ.அ.தி.மு.க கழக மாமன்ற உறுப்பினர்கள் சார்பாக 30.05.2023 அன்று கடிதம் கொடுத்திருந்தோம்.

அதனைத் தடுக்கும் விதத்தில் உரிய நடவடிக்கைகளை துரிதமாக செய்ய வேண்டும். மேலும், மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி, வார்டு எண் 45-க்கு உட்பட்ட நொய்யல் வீதி டி.எஸ்.எண்: 442/3, 443/4, 445/5 காலையில் 16,000 சதுர மீட்டர் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தது. இந்நிலத்தை அப்பகுதியைச் சார்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்தார். ஆக்கிரமிப்பை அகற்றச் சொல்லி அரசு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள். அதனால் மேற்கண்ட முகமது சாலியா திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் OS 286/2005 ஆக தொடர்ந்து அவருக்கு பட்டா வழங்க வேண்டுமென வழக்கு போட்டிருந்தார்.

அந்த மனு மேற்படி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அது குறித்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதற்கு பின்னர், இந்நிலத்தை திருப்பூர் மாநகராட்சி அலுவலர்களும், தெற்கு தாசில்தார் அவர்களும், அ.தி.மு.க முன்னாள் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் அவர்களின் சீரிய முயற்சியில் பாதுகாப்பு செய்தனர். பின்னர் அப்பகுதி கம்பி வேலி அமைத்து எம்.கண்ணப்பன், அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க அ.இ.அ.தி.மு.கழக கவுன்சிலர் இடத்தில் அப்பகுதி மக்களுக்கான மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்ட ஆவணம் செய்யப்பட்டது. அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பலகோடி ரூபாய் மதிப்பில் அமைந்துள்ள அந்த நிலத்தை ஒரு சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிகிறோம். எனவே, பலகோடி மதிப்புள்ள இந்த அரசு நிலத்தை பாதுகாக்கவும், அந்நிலத்தில் பள்ளி கட்டடம் அமைத்து அப்பகுதி மக்கள் பயன்பட வழிவகை செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், கவுன்சிலர்கள் தங்கராஜ், ஆர்.ஏ.சேகர், தம்பி என்ற சின்னச்சாமி, முத்துசாமி, நா.கணேசன், சகுந்தலா ஈஸ்வரன், சாந்தி பாலசுப்பிரமணியம், தனலட்சுமி ராமசாமி, ஆனந்தி சுப்பிரமணியம், தமிழ்ச்செல்வி கனகராஜ் உள்ளிட்ட பலரும் அப்போது உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி.க்கு வந்த ஓலை - பரபரப்பான பின்னணி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.