கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்படுத்தப்பட்டது.
இதன் ஒருபகுதியாக திருப்பூரில், வடக்கு காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறைத்துறை போன்ற இடங்களில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. மேலும் திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக வந்து செல்லும் அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ‘வெளிநாடு வாழ் தமிழர் குடியேற்றம் குறித்து கணக்கெடுப்பு’ - ஓ.பன்னீர்செல்வம்