ETV Bharat / state

திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

திருப்பூர் - காங்கேயம் சாலையில் உள்ள பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

author img

By

Published : Jul 3, 2023, 8:46 AM IST

Etv Bharat
Etv Bharat
திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

திருப்பூர்: காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாடகைக்கு, பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 02) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தொழிலாளர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள வேஸ்ட் குடோனில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள் மீது திடீரென பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள் மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் மீது பரவியது.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகளின் உதவி மூலம், இரண்டு மணி நேர போரட்டாத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக, நேற்று விடுமுறை தினம் என்பதால், தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாத காரணத்தால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல கடந்த ஜூன் மாத 23-ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ராயபுரத்தில் உள்ள காதர்பேட்டை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடைத் துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்தில் காதர்பேட்டை பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினந்தோறும் வியாபாரிகள் வந்து பனியன், ஆயத்த ஆடைகள் வாங்கிச் செல்லும் இந்த பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு இயங்கி வந்த 50 கடைகளும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் திருப்பூர் பகுதியில் பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லிங்கத்தை சுற்றி வணங்கிய பாம்பு.. பால் ஊற்றி வழிபட்ட மக்கள்!

திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

திருப்பூர்: காங்கேயம் சாலையில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் கண்ணன், நாராயணன் ஆகியோருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் வாடகைக்கு, பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோன் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூலை 02) ஞாயிற்றுக் கிழமை என்பதால் தொழிலாளர்கள் விடுமுறையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள வேஸ்ட் குடோனில் வைக்கப்பட்டிருந்த பனியன் ஆடைகள் மீது திடீரென பற்றி எரியத் துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, தீயானது வேகமாக பரவி அருகில் இருந்த பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த பின்னலாடை துணிகள் மற்றும் பின்னலாடை இயந்திரங்கள் மீது பரவியது.

இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து தீயை அணைக்க உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர், 3 தனியார் தண்ணீர் லாரிகளின் உதவி மூலம், இரண்டு மணி நேர போரட்டாத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பனியன் ஆடைகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. நல்வாய்ப்பாக, நேற்று விடுமுறை தினம் என்பதால், தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாத காரணத்தால் யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல கடந்த ஜூன் மாத 23-ஆம் தேதி திருப்பூர் மாநகராட்சியின் மையப் பகுதியான ராயபுரத்தில் உள்ள காதர்பேட்டை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடைத் துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்படும் இடத்தில் காதர்பேட்டை பஜார் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினந்தோறும் வியாபாரிகள் வந்து பனியன், ஆயத்த ஆடைகள் வாங்கிச் செல்லும் இந்த பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு இயங்கி வந்த 50 கடைகளும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மீண்டும் திருப்பூர் பகுதியில் பனியன் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் பனியன் வேஸ்ட் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லிங்கத்தை சுற்றி வணங்கிய பாம்பு.. பால் ஊற்றி வழிபட்ட மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.