ETV Bharat / state

செல்ஃபி எடுக்கும் ஆர்வம்: டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : May 14, 2021, 10:07 PM IST

திருப்பத்தூர்: செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிராக்டருடன் கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு
டிராக்டருடன் கிணற்றில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வயலுக்கு டிராக்டரில் சென்றார்.

பின்னர் அங்கு வந்த அவரது மகன் சஞ்சீவ் (20), அதில் ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஆர்வமிகுதியால் டிராக்டரை இளைஞர் இயக்கினார்.

அப்பொழுது டிராக்டருடன் அருகிலிருந்த 120 அடி ஆழ கிணற்றில் இளைஞர் விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி சஞ்சீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

இதையடுத்து தண்ணீரை வெளியேற்றி சஞ்சீவின் உடலை சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர். உடனே காவல் துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர், கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது வயலுக்கு டிராக்டரில் சென்றார்.

பின்னர் அங்கு வந்த அவரது மகன் சஞ்சீவ் (20), அதில் ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். தொடர்ந்து ஆர்வமிகுதியால் டிராக்டரை இளைஞர் இயக்கினார்.

அப்பொழுது டிராக்டருடன் அருகிலிருந்த 120 அடி ஆழ கிணற்றில் இளைஞர் விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை கிருஷ்ணமூர்த்தி சஞ்சீவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் இளைஞரை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

டிராக்டருடன் கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு

இதையடுத்து தண்ணீரை வெளியேற்றி சஞ்சீவின் உடலை சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர். உடனே காவல் துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கன்டெய்னர் - லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.