திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 14) காவல் ஆய்வாளர் ஹேமச்சந்திரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பத்திர எழுத்தர் 6 பேரிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அலுவலக நுழைவாயில் கதவு மூடப்பட்டு பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் உள்ளே இருக்கின்றனர்.