ETV Bharat / state

ஒருபக்கம் சாலை மறியல், மறுபக்கம் சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள் - திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிடம்

இரண்டு நாள்களாக குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இன்னொரு பக்கம், சாலைகள் முழுவதும் 3 அடி ஆழத்திற்குக் குளம் போல் காணப்படும் நிலையில் சிறுவர்கள் நீச்சல் அடித்து வருகின்றனர்.

ஒருபக்கம் மக்கள் சாலை மறியல் மறுபக்கம் சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்
ஒருபக்கம் மக்கள் சாலை மறியல் மறுபக்கம் சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்
author img

By

Published : Nov 18, 2021, 9:21 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது..

இந்த ஏரியிலிருந்து உபரி நீர் கடந்த இரண்டு நாள்களாக வெளியேறி வருகிறது. பல்வேறு இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணமாக பெரிய வரிகம் இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஒருபக்கம் மக்கள் சாலை மறியல் மறுபக்கம் சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்

இந்நிலையில், சாலைகள் முழுவதும் 3 அடி ஆழத்திற்குக் குளம் போல் காணப்படும் நிலையில் சிறுவர்கள் சாலையில் செல்லும் உபரி நீரில் நீச்சல் அடித்து வருகின்றனர்.

மக்கள் சாலை மறியல்
மக்கள் சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று (நவ.17) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வெள்ள நீர் அதிகரித்துள்ளதால் வீடுகளில் உள்ள பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.
கிராம மக்கள் கடந்த இரண்டு நாள்களாக உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அலுவலர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டு நோக்கிச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்
சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேற்பட்ட இந்த மறியலால் அப்பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து தற்காலிகமாகக் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய வரிகம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதன் அருகில் உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியில் உள்ள பெரிய ஏரி நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது..

இந்த ஏரியிலிருந்து உபரி நீர் கடந்த இரண்டு நாள்களாக வெளியேறி வருகிறது. பல்வேறு இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள காரணமாக பெரிய வரிகம் இந்திராநகர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஒருபக்கம் மக்கள் சாலை மறியல் மறுபக்கம் சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்

இந்நிலையில், சாலைகள் முழுவதும் 3 அடி ஆழத்திற்குக் குளம் போல் காணப்படும் நிலையில் சிறுவர்கள் சாலையில் செல்லும் உபரி நீரில் நீச்சல் அடித்து வருகின்றனர்.

மக்கள் சாலை மறியல்
மக்கள் சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று (நவ.17) இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வெள்ள நீர் அதிகரித்துள்ளதால் வீடுகளில் உள்ள பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகின்றன.
கிராம மக்கள் கடந்த இரண்டு நாள்களாக உணவில்லாமல் தவித்து வருகின்றனர். அலுவலர்கள் வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஆம்பூரிலிருந்து பேரணாம்பட்டு நோக்கிச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்
சாலையில் நீச்சல் அடிக்கும் சிறுவர்கள்

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேற்பட்ட இந்த மறியலால் அப்பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு கால்வாய்களை உடனடியாக சுத்தம் செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து தற்காலிகமாகக் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கனமழை எதிரொலி - கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் மூடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.