ETV Bharat / state

நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு: ரயில்வே பாலத்தில் மழைநீர்! - Occupancy of aquifers

திருப்பத்தூர்: நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்ப்பட்டதால் ரயில்வே பாலத்தை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு: ரயில்வே பாலத்தில் மழைநீர்!
நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு: ரயில்வே பாலத்தில் மழைநீர்!
author img

By

Published : Apr 16, 2021, 2:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. திருப்பத்தூர் பகுதியிலிருந்து இந்த ரயில்வே மேம்பாலம் கடந்துதான் 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகள், தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க விற்கவும் திருப்பத்தூர் நகர் பகுதியை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு: ரயில்வே பாலத்தில் மழைநீர்!
இந்த மேம்பாலம் மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைக்காலங்களில் நேற்று(ஏப்.15) மழைநீர் வெளியேற வழியின்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. மழை நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதி செல்லவேண்டும் என்பதினால் மட்டும்தான் நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுகின்றனர்.
அரசுக்கு சொந்தமான நீர்நிலை, ஆற்று ஓடைகள், குளம் போன்ற பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததினால், ஏரிக்கு செல்லவேண்டிய மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வாக உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஏரி போல் தேங்கி இருக்கிறது. மழை பெய்யும்போதெல்லாம் தேங்கி நிற்கும் மழைநீரை நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் வெளியேற்றுவது வாடிக்கையாக உள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக மழைநீர் செல்லும் கால்வாய் ஓடைகளை தூர்வாரி ஏரிக்கு கொண்டு சென்றால் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதனையும் படிங்க: மாநில அரசை பலவீனமாக்குகிறது மத்திய அரசு - மகாத்மாவின் பேரன்

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. திருப்பத்தூர் பகுதியிலிருந்து இந்த ரயில்வே மேம்பாலம் கடந்துதான் 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகள், தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க விற்கவும் திருப்பத்தூர் நகர் பகுதியை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நீர்நிலை ஓடைகள் ஆக்கிரமிப்பு: ரயில்வே பாலத்தில் மழைநீர்!
இந்த மேம்பாலம் மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழைக்காலங்களில் நேற்று(ஏப்.15) மழைநீர் வெளியேற வழியின்றி மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. மழை நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு பகுதி செல்லவேண்டும் என்பதினால் மட்டும்தான் நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுகின்றனர்.
அரசுக்கு சொந்தமான நீர்நிலை, ஆற்று ஓடைகள், குளம் போன்ற பகுதிகளை பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததினால், ஏரிக்கு செல்லவேண்டிய மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வாக உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஏரி போல் தேங்கி இருக்கிறது. மழை பெய்யும்போதெல்லாம் தேங்கி நிற்கும் மழைநீரை நகராட்சி நிர்வாகம் மின்மோட்டார் மூலம் வெளியேற்றுவது வாடிக்கையாக உள்ளது.
உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக மழைநீர் செல்லும் கால்வாய் ஓடைகளை தூர்வாரி ஏரிக்கு கொண்டு சென்றால் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதனையும் படிங்க: மாநில அரசை பலவீனமாக்குகிறது மத்திய அரசு - மகாத்மாவின் பேரன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.