திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னகண்ணன். இவர் பெரியவரிகம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான 6 பசுக்களை நேற்று (ஏப்.21) மாலை மேய்ச்சலுக்காக பெரியவரிகம் ஏரிகரை பகுதிக்கு அனுப்பியுள்ளார்/
ஏரிக்கரையில் புதர் பகுதியில் இருந்து பயங்கரமாக சத்தம் கேட்டதையடுத்து, அங்கு இருந்தவரகள் அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது மேய்ச்சலில் இருந்த பசு மர்ம பொருள் ஒன்றை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் தாடை கிழிந்து ரத்த வெள்ளத்தில் பசு பரிதவித்துள்ளது.
உடனடியாக பசுவிற்கு முதலுதவியளித்த சின்னகண்ணன் இதுகுறித்து உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இந்நிகழ்வு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே பகுதியில் கடந்த மாதம் பன்றியை வேட்டையாட அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்ததில் பசு இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு தலைக்காதல்: சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி