ETV Bharat / state

தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது

author img

By

Published : Sep 23, 2020, 6:55 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்தவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கைது செய்யபட்ட இளைஞர்
கைது செய்யபட்ட இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்தத் திருட்டு குறித்து கண்டறிய வாணியம்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான காவல் துறையினர் நேதாஜி நகர், பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பதும் இவர் வாணியம்பாடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து 3 புல்லட் உள்பட ஐந்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

மேலும் காவல் துறையினர் இது சம்பந்தமாக மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோவது வழக்கமாக இருந்துவருகிறது. இந்தத் திருட்டு குறித்து கண்டறிய வாணியம்பாடி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான காவல் துறையினர் நேதாஜி நகர், பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பதும் இவர் வாணியம்பாடி, அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து 3 புல்லட் உள்பட ஐந்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.

மேலும் காவல் துறையினர் இது சம்பந்தமாக மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.