ETV Bharat / state

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் தீ விபத்து.. தந்தை, மகன் உயிரிழப்பு..

author img

By

Published : Feb 12, 2023, 12:59 PM IST

Updated : Feb 12, 2023, 1:42 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Fire broke out at a firecracker stall near Vaniyambadi
Fire broke out at a firecracker stall near Vaniyambadi
பட்டாசு கடையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியை சேர்ந்தவர் குமார்(45). இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த கடையில் இன்று (பிப். 12) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அவரும், அவருடைய மகன் தயாமூர்த்தி என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் கடையில் இருந்த வேலாயுதம், ராமன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடிக்க தொடங்கிவிட்டன. அந்த நேரத்தில் 5 பேர் உள்ளேயே சிக்கியுள்ளனர். இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், பட்டாசு வெடிக்கும் சத்தத்தையும் அறிந்த மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

பட்டாசு கடையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் பகுதியை சேர்ந்தவர் குமார்(45). இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தார். இந்த கடையில் இன்று (பிப். 12) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அவரும், அவருடைய மகன் தயாமூர்த்தி என்பவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் கடையில் இருந்த வேலாயுதம், ராமன் ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை போலீசார் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருக்கும்போது, தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடிக்க தொடங்கிவிட்டன. அந்த நேரத்தில் 5 பேர் உள்ளேயே சிக்கியுள்ளனர். இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், பட்டாசு வெடிக்கும் சத்தத்தையும் அறிந்த மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில் தீயணைப்புத்துறையினர் சம்பவயிடத்துக்கு விரைந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் ரூ.75 லட்சம் வரை கொள்ளை.. திருவண்ணாமலையில் பரபரப்பு..

Last Updated : Feb 12, 2023, 1:42 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.