ETV Bharat / state

தாமரைப் பறிப்பதற்குப் போட்டி: குளத்தில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 19, 2020, 7:56 PM IST

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே நண்பர்களுடன் தாமரைப் பறிப்பதற்குப் போட்டியிட்ட ஆட்டோ ஓட்டுநர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Competition to pick the lotus; Auto driver drowns in pool
Competition to pick the lotus; Auto driver drowns in pool

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (37). இந்நிலையில் இவர் மதுபோதையில், அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அக்குளத்திலிருந்த தாமரைப் பூவை யார் பறிப்பது என, நண்பர்களுடன் போட்டியில் ஈடுபட்டுள்ளார். பிறகு தாமரைப் பூவைப் பறிக்கச் சென்ற ஆறுமுகம், எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கியுள்ளார்.

தாமரையைப் பறிக்கச் சென்ற மற்றவர்கள் கரை திரும்பியும், வெகு நேரமாக ஆறுமுகம் கரை திரும்பாமல் இருந்ததைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஆறுமுகத்தின் உறவினர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பின் ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நீரில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:60 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இருவருக்கு சிகிச்சை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம் (37). இந்நிலையில் இவர் மதுபோதையில், அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அக்குளத்திலிருந்த தாமரைப் பூவை யார் பறிப்பது என, நண்பர்களுடன் போட்டியில் ஈடுபட்டுள்ளார். பிறகு தாமரைப் பூவைப் பறிக்கச் சென்ற ஆறுமுகம், எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கியுள்ளார்.

தாமரையைப் பறிக்கச் சென்ற மற்றவர்கள் கரை திரும்பியும், வெகு நேரமாக ஆறுமுகம் கரை திரும்பாமல் இருந்ததைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ஆறுமுகத்தின் உறவினர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஆறு மணி நேர போராட்டத்திற்குப் பின் ஆறுமுகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நீரில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:60 அடி பள்ளத்தில் விழுந்த கார்: உயிர் தப்பிய இருவருக்கு சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.