ETV Bharat / state

நாட்றம்பள்ளி அருகே பெண் தர மறுத்ததால் கல்லூரி மாணவி கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 9:04 AM IST

College girl Murder: நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

college-girl-killed-near-natrampalli
நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவி கொலை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா (18). இவர் பருகூர் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், ஜீவிதா அம்மா ஜெயப்பிரதாவின் தம்பி முறையான சரண்ராஜ் (35) என்பவர், திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஷோ ரூமில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ஜீவிதாவும், சரண்ராஜ் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்ராஜ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால், ஜீவிதாவின் தாயார் சரண்ராஜ்-க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, ஜீவிதா சரண்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார்.‌ இந்நிலையில் நேற்று (அக்.14) ஜீவிதாவின் பெற்றோர் வேலைக்குச் சென்று உள்ளனர். மேலும், கல்லூரி விடுமுறை என்பதால் ஜீவிதா தனியாக வீட்டினுள் இருந்துள்ளார்.

இதனை அறிந்த சரண்ராஜ், ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து உள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், நாட்டறம்பள்ளி போலீசார் ஜீவிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரண்ராஜ் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “அவர் அன்புள்ள அக்கா, மாமா, அப்பா, அம்மா அவர்களுக்கு சரண்ராஜ் எழுதுவது, நானும், ஜீவிதாவும் நான்கு வருடம் காதலித்தோம். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு சரண்ராஜ், ஜீவிதா” என்று எழுதியிருந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சரண்ராஜ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது” - தனியார் பள்ளி விதிகள் மீது நீதிபதி கருத்து!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் ஜீவிதா (18). இவர் பருகூர் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், ஜீவிதா அம்மா ஜெயப்பிரதாவின் தம்பி முறையான சரண்ராஜ் (35) என்பவர், திருப்பத்தூர் அடுத்த சின்னகசிநாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு ஷோ ரூமில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ஜீவிதாவும், சரண்ராஜ் என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில், சரண்ராஜ் ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் என தெரிய வந்ததால், ஜீவிதாவின் தாயார் சரண்ராஜ்-க்கு பெண் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனையடுத்து, ஜீவிதா சரண்ராஜிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த சரண்ராஜ், கடந்த ஒரு வாரமாக ஜீவிதாவை பின் தொடர்ந்து உள்ளார்.‌ இந்நிலையில் நேற்று (அக்.14) ஜீவிதாவின் பெற்றோர் வேலைக்குச் சென்று உள்ளனர். மேலும், கல்லூரி விடுமுறை என்பதால் ஜீவிதா தனியாக வீட்டினுள் இருந்துள்ளார்.

இதனை அறிந்த சரண்ராஜ், ஜீவிதாவின் வாயில் துணியை வைத்து, கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை செய்து உள்ளார். பின்னர் அவரது செல்போனையும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில், நாட்டறம்பள்ளி போலீசார் ஜீவிதாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரண்ராஜ் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், “அவர் அன்புள்ள அக்கா, மாமா, அப்பா, அம்மா அவர்களுக்கு சரண்ராஜ் எழுதுவது, நானும், ஜீவிதாவும் நான்கு வருடம் காதலித்தோம். கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்பட்டோம். ஆனால் முடியவில்லை. அதனால் இந்த முடிவுக்கு வந்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள். இப்படிக்கு சரண்ராஜ், ஜீவிதா” என்று எழுதியிருந்தார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து படுகொலை செய்துவிட்டு, தப்பி ஓடிய சரண்ராஜ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: “தேசிய பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடினால் மட்டும் போதாது” - தனியார் பள்ளி விதிகள் மீது நீதிபதி கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.