ETV Bharat / state

ஊராட்சி மன்றத்தலைவியின் கணவர் மீது தாக்குதல்

ஆம்பூர் அருகே எருது விடும் திருவிழாவிற்கு அனுமதிகேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author img

By

Published : Jan 27, 2022, 9:52 PM IST

Panchayat
Panchayat

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் ஜன.27ஆம் தேதியான இன்று நடைபெறவிருந்த எருது விடும் திருவிழா தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, வீராங்குப்பம் கிராமத்தில் தேர்தல் வெற்றி பெற்றது தொடர்பாக ஏற்கெனவே இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவி திவ்யாவின் கணவர் ஜானகிராமன் என்பவர் நேற்று நள்ளிரவு எருது விடும் திருவிழா தொடர்பாக ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெண்கள் சிலரைக் கேலி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பு மோதல்

இதனால் நள்ளிரவே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவல் துறை இருதரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் சென்றுகொண்டிருந்த ஜானகிராமன் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஜானகிராமன் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காவல் துறை விசாரணை

பெண்கள் புகார்

இந்த நிலையில் ஜானகிராமன், தங்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு கேலி செய்ததாக வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல் எருது விடும் திருவிழா ரத்துசெய்யப்பட்டதால் முன்விரோதம் காரணமாக, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக ஜானகி ராமனும் புகார் அளித்துள்ளார்.

இருதரப்பினர் புகாரைப் பெற்றுக்கொண்ட உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எருது விடும் திருவிழா நிறுத்தப்பட்ட ஏமாற்றத்திலிருந்த கிராமத்தில், பெண்களைக் கேலி கிண்டல் செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் ஜன.27ஆம் தேதியான இன்று நடைபெறவிருந்த எருது விடும் திருவிழா தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஆனதால் திடீரென ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக, வீராங்குப்பம் கிராமத்தில் தேர்தல் வெற்றி பெற்றது தொடர்பாக ஏற்கெனவே இரு தரப்பினரிடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தலைவி திவ்யாவின் கணவர் ஜானகிராமன் என்பவர் நேற்று நள்ளிரவு எருது விடும் திருவிழா தொடர்பாக ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெண்கள் சிலரைக் கேலி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருதரப்பு மோதல்

இதனால் நள்ளிரவே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவல் துறை இருதரப்பிற்கும் இடையே சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் சென்றுகொண்டிருந்த ஜானகிராமன் மீது எதிர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த ஜானகிராமன் ஆம்பூர் அரசு மருத்துவமனையிலிருந்து, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காவல் துறை விசாரணை

பெண்கள் புகார்

இந்த நிலையில் ஜானகிராமன், தங்களை விலங்குகளுடன் ஒப்பிட்டு கேலி செய்ததாக வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல் எருது விடும் திருவிழா ரத்துசெய்யப்பட்டதால் முன்விரோதம் காரணமாக, அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் தன்மீது தாக்குதல் நடத்தியதாக ஜானகி ராமனும் புகார் அளித்துள்ளார்.

இருதரப்பினர் புகாரைப் பெற்றுக்கொண்ட உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எருது விடும் திருவிழா நிறுத்தப்பட்ட ஏமாற்றத்திலிருந்த கிராமத்தில், பெண்களைக் கேலி கிண்டல் செய்ததாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணியம் பேசும் 'ஷியாம் சிங்கா ராய்' திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.